India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக கட்சியில் 28 அணிகளை உருவாக்கி அதன் பட்டியலை இன்று வெளியிட்டிருந்தார் விஜய். அதில், திருநர் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல் கொடுக்கும் வித்யா, இந்தப் பிரச்னையை சுட்டிக் காட்டியிருக்கிறார். ’9’ என்ற இந்த இழிவை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் நாங்கள் சுமக்க வேண்டும் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எந்த நாட்டில் எத்தனை பேர் ₹8,700 கோடிக்கு மேல் ($1 பில்லியன்) சொத்து வைத்திருக்கின்றனர் என்று பார்க்கலாம்.
அமெரிக்கா – 813 பேர்
சீனா – 406 பேர்
இந்தியா – 200 பேர்
ஜெர்மனி – 132 பேர்
ரஷ்யா – 120 பேர்
இத்தாலி – 73 பேர்
பிரேசில் – 69 பேர்
புதிய மோசடி ஒன்று பரவுவதை பாப் பாடகர் கான்யே வெஸ்ட் சுட்டிக் காட்டியிருந்தார். பிரபலங்கள் சம்மந்தம் இல்லாத பொருளை சோசியல் மீடியாவில் ப்ரமோட் செய்வார்கள். பின்னர், அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் கொடுப்பார்கள். இதற்கு பெரிய சன்மானம் கிடைக்கும். த்ரிஷாவும் அப்படியான உத்தியை கையில் எடுத்தாரா அல்லது <<15430809>>X பக்கம் உண்மையிலேயே ஹேக் ஆனதா<<>> என்று ரசிகர்கள் குழம்புகின்றனர்.
JEE மெயின்ஸ் தேர்வுக்கான முடிவுகளை சற்றுமுன் NTA வெளியிட்டது. அதில், 14 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்துள்ளனர். ஆனால், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த 5 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். IIT, NIT போன்ற நாட்டின் உயர்ந்த கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த JEE மதிப்பெண்கள் உதவுகின்றன. மெயின்ஸ் தேர்வைத் தொடர்ந்து மாணவர்கள் Advanced தேர்வு எழுத வேண்டும்.
1980 முதல் 2006 வரை 9ஆவது கிரகமாக கருதப்பட்ட ப்ளூட்டோ, பின்னர் நீக்கப்பட்டது. அதற்கு காரணம், கிரகத்துக்கான 3 விதிகளில் ஒன்றை அது பூர்த்தி செய்யவில்லை. அதாவது, சூரியனை சுற்ற வேண்டும் என்ற முதல் விதி மற்றும் உருண்டையாக இருக்க வேண்டும் என்ற இரு விதிகளில் ப்ளூட்டோ வென்றது. ஆனால், தன்னுடைய பாதையில் மற்ற பொருட்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற 3ஆவது விதியில் அது ஃபெயில் ஆகி வெளியேறியது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) ஆண்டுக் கூட்டம் பிப்.28-ல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் PF-க்கு வழங்கப்படும் வட்டியை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. 2023-24 ஆண்டுக்கான வட்டி 8.25% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கு (2024-25) மேலும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான பணியாளர் பயன்பெறுவர்.
35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனத்தின் மண்டை ஓடு ஒன்றினை ஆணா பெண்ணா என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Australopithecus africanus என்ற மனித இனத்தைச் சேர்ந்த அந்த மண்டை ஓடு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பற்களில் உள்ள ஒரு வகை புரோட்டீனைக் கொண்டு அந்த மண்டை ஓடு ஆணினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களுடைய வாழ்க்கை முறை, இனப்பெருக்க முறை ஆகியவற்றை அறிய முடியும்
இந்த மாதம் ஒரே அரசு விடுமுறையான தைப்பூசம் விழா இன்றுடன் முடிவடைந்தது. இனி அடுத்த மாதம் 2 நாள்கள் அரசு விடுமுறை வருகிறது. மார்ச் 30 அன்று தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான் ஆகிய நாள்கள் அரசு விடுமுறைகளாகும். மார்ச் 29 சனிக்கிழமை வருவதால், இரண்டு அரசு விடுமுறைகளையும் சேர்த்தால் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதற்கேற்ப உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாமே.
பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 26,277 ஆக உயர்ந்த நிஃப்டியின் அளவு, அதன் பிறகு சுமார் 3,500 புள்ளிகள் வீழ்ந்தது. இதனால் கடந்த நவம்பரில் ரூ.31 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.10 லட்சம் கோடி, ஜனவரியில் ரூ.27 லட்சம் கோடி, பிப்ரவரியில் ரூ.15 லட்சம் கோடி என மொத்தம் ரூ.83 லட்சம் கோடி நஷ்டத்தை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி நெல்லை இருட்டுக்கடைக்கு சென்றிருந்தார். அன்று இரவு கடையின் ஓனர் சுலோச்சனா (87) காலமானார். இதனையடுத்து, ஸ்டாலினை சந்தித்த நிர்வாகி உயிரிழந்ததாக விஷமிகள் வதந்தி பரப்பினர். ஆனால், ஸ்டாலினை சந்தித்தது, குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினரும், தற்போது தொழிலை கவனித்து வருபவருமான கவிதா. உண்மையில் உயிரிழந்தது கடையின் நிறுவனரான பிஜிலி சிங்கின் மனைவி சுலோச்சனா.
Sorry, no posts matched your criteria.