India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்களை வீழ்த்தி, எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவர், தனிப்பட்ட காரணங்களாக விளையாடவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் வலுவாக இருக்கும் ஆஸி., அணிக்கு, பந்துவீச்சில் அவர் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
TVKவில் உருவாக்கப்பட்ட புதிய அணிகளால் விஜய் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். திருநர் என்ற அணி ‘9’-வது இடத்தில் இருந்தது சர்ச்சையான நிலையில், தற்போது குழந்தைகள் அணி தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி சிறுவர்களை பரப்புரை போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் குழந்தைகள் அணி உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் என்ன? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெறாததால், தேர்வுக்குழுவை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். ஜெய்ஸ்வாலின் ODI கெரியரையே கம்பீர் பாழாக்கி விட்டதாகவும், ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு மாற்றாக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்வதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ENGக்கு எதிரான ஒரு ODIயில் விளையாட விட்டு, அவரது திறமையை பரிசோதிப்பதா எனவும் வினவுகின்றனர்.
MGR காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன், சசி, TTVக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர். ஜெ., மறைவுக்கு பிறகு அவரை தான் முதல்வராக்க திட்டமிடப்பட்டிருந்தது. திடீர் திருப்பமாக தலைமை பதவிக்கு இபிஎஸ் வந்தார். அதன்பின், சசிகலா நீக்கம், பாஜக உடனான கூட்டணி முறிவு என அதிரடி காட்டியதால், தற்போது<<15434980>> EPS-க்கு <<>>செங்கோட்டையன் மூலம் செக் வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
‘டிராகன்’ படம் கண்டிப்பாக ‘டான்’ படத்தின் காப்பி இல்லை என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். 2 ஆண்டுக்கு முன் வந்த படத்தை எப்படி அப்படியே காப்பி அடிக்க முடியும் எனவும், டிரெய்லர் கட்ஸ் வேண்டுமானால், அப்படத்தை ஞாபகப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டிராகன் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஜூலையுடன் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. கூட்டணி ஒப்பந்தப்படி கமல்ஹாசன் எம்.பி.யாக உள்ளார். திமுகவின் வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, திமுக கூட்டணியில் உள்ள வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், கமல்ஹாசன் எம்.பி. ஆவதால் தற்போதுள்ள திமுக எம்.பி.க்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
IND – ENG இடையிலான 3rd ODI, இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ரோகித் 13 ரன்கள் எடுத்தால் ODIயில் 11,000 ரன்களையும், கோலி 89 ரன்கள் எடுத்தால் 14,000 ரன்களையும் கடப்பார்கள். கடந்த சில போட்டிகளில் ரோகித், கோலி பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதற்கு கடைசி போட்டியில் ரோகித் பதிலடி கொடுத்த நிலையில், இன்றைய போட்டியில் கோலி பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இபிஎஸ் – செங்கோட்டையன் விவகாரம் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இத்தீர்ப்பை, அதிமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். பல பெரிய படங்களில் பெண் கேரக்டர்கள் மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்ததாகவும், ஒரு படத்தில் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்த படத்தின் கதையின் வலிமையை உணரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
2026இல் BJP உடன் கூட்டணி இல்லை என EPS விடாப்பிடியாக இருப்பதால், அவருக்கு பதில் அதிமுக தலைமை பொறுப்புக்கு செங்கோட்டையனை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தான் இபிஎஸ் நிகழ்ச்சி புறக்கணிப்பு என சொல்லப்படுகிறது. இதனால், EPS அணி – செங்கோட்டையன் அணி என அதிமுக 2ஆக உடைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.