India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியிலிருந்து ₹2.5 கோடியை ED அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் ஏதும் எடுத்துச் செல்லவில்லை என அமைச்சர் நேற்று கூறியிருந்தார். ஆனால், கல்லூரியிலிருந்து கணக்கில் வராத ரொக்கம், பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே துரைமுருகன் டெல்லி விரைந்துள்ளார்.
தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் வழிபட்டு வரும் தெய்வமே குலதெய்வமாக இருக்கிறது. சில் இடங்களில் அது முன்னோராக கூட இருக்கலாம். குடும்பம் அடுத்த தலைமுறைக்கு வளர்ந்து, வம்சம் விருத்தி அடைய குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். வீட்டில் எந்த நற்காரியம் என்றாலும், குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்தோ, அபிஷேகம் செய்தோ வழிபடும் போது, நிகழும் காரியத்தில் இருக்கும் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
நியூ பார்ட்டியில் 4 பேரைக் கொலை செய்து சடலங்களை செப்டிக் டேங்கில் மறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MP மாநிலம் பர்ஹவான் பகுதியில் உள்ள வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் ஆய்வு செய்ததில் அள்ள அள்ள சடலங்கள் கிடந்துள்ளன. விசாரணையில், கடந்த 1ஆம் தேதி நடந்த விருந்தில், ஹவுஸ் ஓனர் சுரேஷ், பிரஜாபதி உள்ளிட்ட அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் பிறந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. தேசிய மக்கள் தொகை வளர்ச்சி 0.92%ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் அது வெறும் 0.30%தான். இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
ஆசிய யானைகளைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு ஆப்பிரிக்க யானைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. இப்போது தெரிந்து கொள்வோம்.
* யானைகளின் மூளையின் எடை மட்டும் 5.4 கிலோ இருக்கும்
* யானைகளின் பேறுகாலம் மொத்தம் 22 மாதங்கள்
* குட்டி யானைகள் 10 ஆண்டுகள் வரை தாயுடன்தான் வாழும்
சிட்னியில் தற்போது நடைபெறும் BGT 5ஆவது போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்படுவது ஏன் தெரியுமா? ஆஸ்திரேலிய லெஜண்ட் வீரர் மெக்ராத்தின் மனைவி ஜேன் 2008ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது நினைவாகவும், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் பிங்க் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
கடமைகள் நிறைந்த வாழ்க்கையில் குடும்பத்துக்காக ஓடி கொண்டிருப்பவர்களே, ஒரு நிமிடம் ஓட்டத்தை நிறுத்தி உங்களுக்காக ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என யோசியுங்கள். இயற்கையின் கொடையான வாழ்க்கையில் நமக்கு என கொஞ்சம் நேரம் வேண்டும். கடமையை விட்டு கனவுகளை நோக்கி ஓடுங்கள் என கூறவில்லை. பிடித்த படம், நண்பரை சந்திப்பது என உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும் விஷயங்களை செய்யுங்கள். அன்றைய நாள் அழகாகும்.
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. இதுவரை இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளிவராததால், அரசுப் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் இனி கவனிப்பார்கள். ஊரகப் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியையும் அரசு செய்யவில்லை.
BGT தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 162 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் அவ்வணியின் விக்கெட்டுகளை அனைத்தையும் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இதில், கேப்டன் பும்ரா விளையாடாததால் சோர்வாய் இருந்த ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச வராததால் நடப்பு போட்டி களையிழந்துள்ளது. மொத்த தொடரில் 30க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பும்ராவால் இப்போட்டியில் வெற்றி சாத்தியம் என்று கருதப்பட்டது. ஆனால் அவருக்கு முதுகு பிடிப்பு காரணமாக முதல் ஓவர்களை சிராஜும் கிருஷ்ணாவும் வீசினர். பும்ரா எப்போது மீண்டும் பந்துவீச வருவார் என்று தெரியாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.