news

News February 12, 2025

BREAKING: இந்தியா அபார வெற்றி

image

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0க்கு என்ற கணக்கில் வென்றது. அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

News February 12, 2025

உங்க SBI கணக்கில் ₹236 பிடிக்கப்பட்டுள்ளதா?

image

டெபிட் கார்டு பயனர்களுக்கு, SBI வங்கி ஆண்டு பராமரிப்புக் கட்டணம் விதிப்பது தெரியுமா? டெபிட் கார்ட் வகையை பொறுத்து, கட்டணம் இருக்கும். Classic/Silver/Global Contactless Cards-க்கு ₹236 (₹200+18%GST) கட்டணமும், Gold/Combo/My Card (Image) Cards-க்கு ₹250+GST-யும், Platinum Card-க்கு ₹325+GST-யும், Pride/Premium பிசினஸ் Cards-க்கு ₹350+GST-ம் கட்டணம் பிடிக்கப்படும். பிற வங்கிகளிலும் இக்கட்டணம் உண்டு.

News February 12, 2025

ஒரே அரை சதம்… சச்சினை பின்னுக்குத் தள்ளிய கிங் கோலி

image

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மீண்டும் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்
அரை சதம் அடித்த அவர், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்த ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலி 340 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், சச்சின் 353, சங்ககாரா 360 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

News February 12, 2025

அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கமுடையவரா?

image

நகம் கடிக்கும் பழக்கமுடையவர்கள், அதனால் எவ்வளவு பிரச்னை வரும் என தெரியுமா? நகம் கடிப்பது அழற்சியை உண்டாக்கி, காயங்களின் காரணமாக நகச்சொத்தை வரலாம். அழுக்குகளில் இருக்கும் பாக்டீரியாக்களால் காய்ச்சல், சளி வரலாம். நகம் வயிற்றில் போனால், பிரச்னைகளை உண்டாக்கும். கடிக்கும் போது தோலில் சிறு வெட்டுகள் ஏற்பட்டு தோல் பிரச்னைகளை வரலாம். பற்கள் மற்றும் ஈறுகளில் ப்ரூக்ஸிசம் பிரச்னை வரும். SHARE IT

News February 12, 2025

இலவசங்களால் ஒட்டுண்ணிகள் உருவாகின்றன: SC

image

தேர்தலை முன்னிட்டு கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இலவசமாக ரேஷனும், பணமும் கிடைப்பதால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை. நாட்டின் வளர்ச்சியில் அவர்களை பங்களிக்க செய்வதை விட்டுவிட்டு, ஒட்டுண்ணிகளை நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள். ஏழைகள் மீதான உங்கள் கரிசனத்தை, அவர்களை மேம்படுத்துவதில் காட்டுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

News February 12, 2025

மோடி மைதானத்தில் சாதனை படைத்த இந்திய அணி

image

அகமதாபாத் மோடி மைதானத்தில் ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை இந்தியா (356/10), ENG எதிராக இன்று பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் தென்னாப்ரிக்கா அணி 2010இல் 365/2 ரன்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. 2022இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 325/5 ரன்களும், 2022இல் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 324/4 ரன்களும் எடுத்துள்ளன.

News February 12, 2025

‘டிராகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News February 12, 2025

தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

image

அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்துமதச் சடங்குகள், வேதங்களில் சிறந்தவரான அவர், தன் வாழ்நாளை ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக்கூரப்படும் என்று உருக்கமாக தன் இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News February 12, 2025

சபரிமலையில் நடை திறப்பு

image

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 17 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லலாம். மகர சங்கராந்தி முடிந்தும் கடைசி நாள் வரை பக்தர்கள் அதிகமாக திரண்டதால், மாத பூஜைக்காக திறந்திருக்கும் அடுத்த 5 நாட்களிலும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2025

அமைச்சராவதில் SB-க்கு ஏன் இந்த அவசரம்? SC கேள்வி

image

ஜாமின் கிடைத்தவுடனே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன் என்று அவர் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர் மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து வித்யா குமார் என்பர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கும் போது அமைச்சராக தொடர்வது தார்மீகமா? அமைச்சராக தொடர SB விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

error: Content is protected !!