India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த மாதத்தில் தங்க ETF திட்டங்களில், வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரேமாதத்தில் தங்க ETFல் ₹3,751 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விட, ETF திட்டங்கள் வாயிலாக தங்கத்தை யூனிட்களாக டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
பிஹார் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர் தான் பிரசாந்த் கிஷோர் என விசிக கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் வியூகம் என்பது மக்களை ஏமாற்றும் வழி எனவும், வேலையில்லா இளைஞர்களை வைத்துக் கொண்டு கட்சிகளிடம் பணம் பறிக்கும் செயல் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 6 சீட் மேல் கொடுக்க கூடாது என கழுத்தை நெரித்தவர்தான் கிஷோர் என்றும் சாடியுள்ளது.
மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னை, தி.மலை, தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில், சுமார் 63 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் 49 பேர் எனத் தெரியவந்துள்ளது. இதற்கு எதிராக அதிமுக வரும் 18ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.
முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். விநாயகர் மந்திரங்களை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்வது மிகவும் நல்லது என்றாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’ என்பதை உச்சரித்து வந்தால், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியம் கைக்கூடும்.
இபிஎஸ் நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் நாசுக்காக பதிலளித்தாலும், மற்றொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. நேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், இபிஎஸ் பெயரை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை. தற்போது இது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ODI தொடரில் IND அணி ஒயிட் வாஷ் செய்த நிலையில், ஒரு சிறந்த அணியால் தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். தங்களுடைய அணுகுமுறை சரிதான், அதில் எந்த தவறும் இல்லை எனவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தங்களுக்கு பல சவால்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 (திங்கட்கிழமை) வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசுத் துறைகள் மேற்கொள்ளும் என்பதால், மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
☆உடலையும், மனதையும் பலப்படுத்துகிறது. ☆மூட்டுவாதம், விரைவீக்கம் போன்றவை வராமல் தடுக்கிறது. ☆15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ☆ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் ☆அதிகப்படியாக உள்ள தொடை சதையை குறைக்கும். ☆ஆசனம் செய்யும்போது இரண்டு கால்களையும் மாற்றி செய்யவும்.
புதிய வருமான வரி மசோதா பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், 536 பிரிவுகள் உள்ளன. தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ள நிலையில், புதிய சட்டத்தில் இது 16ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதேநேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆய்வுக்காக JPCக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தியின் 29ஆம் படம் 2 பாகங்களாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் பகுதியில் கடல் பின்னணியைக் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.