India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்காலத்தில் காற்றை காசுக்கு தான் வாங்குவோம் என பேசிக்கொண்டு இருக்கும் சூழலில், இப்போதே அது வியாபாரமாகி விட்டது. இத்தாலியை சேர்ந்த ‘கம்யூனிகா’ என்ற நிறுவனம் பிஸினஸில் இறங்கி விட்டது. அங்குள்ள கோமோ ஏரிக்கு அருகில் கிடைக்கும் காற்றை, 400 ml டின்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இதில், தங்கள் நிறுவனத்தின் சீக்ரெட் ரெசிபி ஒன்றை சேர்ப்பதாகவும் கூறி, இந்திய மதிப்பில் ₹907க்கு விற்கப்படுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உள்பட 4 பேரைத் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், *பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர், *வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி, *முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO, *சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாளை ‘காதலர் தினம்’ கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக நீலகிரி, ஓசூரில் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இதனால், 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மகால் ரோஜா- ₹350 – ₹450, பிங்க் ரக ரோஜா- ₹250 – ₹400, ராக்ஸ்டார் ரோஜா- ₹200 – ₹350, ரெட்ரோஸ்- ₹300 – ₹500, மற்ற கலர் ரோஸ்- ₹200 – ₹400 விற்பனையாகிறது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவுப் பிரிவு இயக்குநர் துளசி கப்பார்ட்டை சந்தித்து பேசினார். துளசி பதவியேற்றுக் கொண்ட சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் USA அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
காதலர் தின வாரத்தில் பிப்.13ம் தேதி முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. தம்பதியரும், காதலர்களும் தங்களின் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் விதமாக பரஸ்பரம் முத்தமிடுவதை குறிக்கும் நாளாக இது அமைகிறது. முத்தம் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, உயிர்களின் அடிப்படை உள்ளுணர்வாகவும் உள்ளது. இணையருக்கு இடையே பிணைப்பை வலுப்படுத்துவதுடன், உடல்நலத்துக்கு பல்வேறு நன்மைகள் செய்கிறது முத்தம்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்துவிட்டு மநீம போட்டியிடவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ், இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அலுவலகம் செல்லும் அவசரகதியில் காலை உணவை தவிர்ப்பார்கள். ஆனால், இது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காலை 7 – 8 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ள சாப்பிட்டு விட வேண்டும். மிக தாமதமாக சாப்பிடுவது நீரிழிவு, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றமும் தடைபடும். காலை உணவுக்கும், லஞ்சுக்கும் இடையே குறைந்தது 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பண மோசடி இழப்புக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெண்ணின் பெயரில் அவரது வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக ரூ.15 லட்சம் லோன் பெற்று மோசடி செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோர்ட், தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்தாரா என உறுதி செய்யாமல், கடன் அனுமதித்தது வங்கி நிர்வாகத்தின் சேவை குறைபாடு என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
வெற்றியாளர்கள் என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு வேண்டாத விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல் இருக்க முடியும். அதேபோன்று உங்கள் இலக்கு அடையும் அளவில் இருக்க வேண்டும். நடைமுறைக்கு பொருந்தாத பெரிய இலக்கை நிர்ணயித்து, அடைய முடியவில்லை என்று வருந்தாமல், சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து, வெற்றிபெற்று, முன்னேறுங்கள்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவால், சமையல் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 5% உயர்ந்துள்ளது. நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 60% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உற்பத்தி விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த 2 வாரங்களில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹6 வரை அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.