India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
₹10 நோட்டுக்கு ₹0.96 *₹20 நோட்டுக்கு ₹0.95 *₹50 நோட்டுக்கு ₹1.13 *₹100 நோட்டுக்கு ₹1.17 *₹200 நோட்டுக்கு ₹2.37 *₹500 நோட்டுக்கு ₹2.29 செலவாகிறதாம். தற்போது ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. அதே நேரத்தில், ஒப்பிடுகையில் நாணயங்களின் உற்பத்திக்கே அதிகம் செலவாகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒன்றிணைந்து இதற்கான செலவை செய்கிறார்கள்.
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. FM நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி MPக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். எனினும், அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அடுத்த நிதியாண்டில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், JPCயின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்படும் என தெரிகிறது.
விழுப்புரம் அருகே காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவெக சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளரின் மைத்துனரும், நரசிங்கராயன்பேட்டை பொருளாளருமான சரவணன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வரும் நிலையில், இன்னும் அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார். போரால் சிதிலமடைந்த நாட்டை மறு உருவாக்கம் செய்ய படித்த, படிக்காத என அனைத்துத் தரப்பு ஊழியர்களும் தேவைப்படுவதாகவும், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக தங்களது அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
TN முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை அன்று DISHA குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்த கூட்டம் நடக்கவுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி TN முதல்வர் தலைமையில் DISHA குழு அமைக்கப்பட்டுள்ளது.
FASTagஇல் புதிய மாற்றங்கள் வரும் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், டோல்களைக் கடப்பதற்கு முன்பு உங்கள் FASTag அக்கவுண்டில் போதிய பேலன்ஸ் இல்லை எனில் பிளாக் லிஸ்ட்டுக்கு செல்லும். பின்னர் வாகனத்திற்கு இரு மடங்கு ஃபைன் கட்ட நேரிடும். இதைத் தவிர்க்க உங்கள் கணக்கில் போதுமான இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் KYC விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. PLEASE SHARE IT
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 பட பாடல்களின் பதிப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. 1 மணி நேரம் நடந்த விசாரணையில், உங்களிடம் எத்தனை பங்களாக்கள் உள்ளது? என இளையராஜாவிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தனது ஈடுபாடு அனைத்தும் இசை மீது உள்ளதால், தன்னிடம் உள்ள செல்வம் குறித்து தனக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.
MNC நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு துடிப்பான வணிக சந்தையாக மாறியுள்ளது. கோகோ கோலா, ஹார்லி டேவிட்சன், ஆப்பிள், கோல்கேட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகளவில் டிமாண்ட் குறைந்த நிலையிலும், இந்தியாவில் அவை அதிக வருமானத்தை ஈட்டியிருப்பது, The Economic Times அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கருத்து தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். கட்சியின் 50 ஆண்டுகால விதியை மீறி திருத்தம் செய்ததே அதிமுகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற தீர்ப்பு வருவதற்கு காரணம் என சாடியுள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் வெற்றிக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.