news

News January 5, 2025

மாணவனுக்கு பாலியல் கொடுமை

image

அண்ணா பல்கலை., விவகாரம் மாநிலத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்று ஈரோட்டில் 9ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவனை பைக்கில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அம்மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 5, 2025

ஆபாச பேச்சு, தொல்லை.. பிரபல நடிகை குற்றச்சாட்டு

image

தனக்கு ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக நடிகை ஹனிரோஸ் குற்றம்சாட்டியுள்ளார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அவர், பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் தாம் கலந்து கொண்டபோது அங்கு வந்தவர், கண்ணியக் குறைவாக தன்னிடம் ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். மேலும், சமூகவலைதளங்களில் பின்தொடர்ந்து தொல்லை அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News January 5, 2025

ஆரம்பத்திலேயே திமுகவுக்கு எதிராக குரல்

image

CPI (M) புதிய மாநிலச் செயலாளராக தேர்வான உடனே திமுகவுக்கு எதிராக பெ.சண்முகம் கருத்துக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், திமுக வெளிச்சத்தில் சிபிஎம் எப்போதும் இருந்ததில்லை. அப்படி கூறுவது பொருத்தமற்றது. மக்கள் பிரச்னைக்காகவும், மதவெறி சக்திகளை ஒழிக்கவும் தெருவில் இறங்கிப் போராடுவோம். எங்களின் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News January 5, 2025

மனைவி டார்ச்சர்.. வீடியோ பதிவிட்டு கணவர் தற்கொலை

image

மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகின்றன. குஜராத்தில் சுரேஷ் என்பவர் கடந்த மாதம் தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் செல்போனை கைப்பற்றி போலீஸ் ஆய்வு செய்தது. அதில் சுரேஷ் தன்னை, தனது மனைவி ஜெயா மனரீதியில் கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தள்ளிவிட்டதாகவும், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News January 5, 2025

கொலை செய்வது எப்படி என யூடியூபில் தேடிய கிரிமினல்

image

லக்னோவில் தாய், 4 தங்கைகளைக் <<15037822>>கொலை<<>> செய்த அர்ஷத், வலிக்காமல் எப்படி கொலை செய்வது என யூடியூப் வீடியோவை பார்த்தது தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்துவிட்டுத் தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் கூகுளில் தேடியுள்ளார். நியூ இயர் அன்று நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளிவருவது காவல்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News January 5, 2025

சூர்யாவுக்கு வில்லன் இவரா?

image

‘சூர்யா 45’ படத்தில், அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியே வில்லனாக நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சூர்யா வக்கீலாக நடித்தும் வரும் நிலையில், எதிர் தரப்பு வக்கீலாக நெகட்டிவ் கேரக்டரில் பாலாஜி நடித்து வருவதாக கூறப்படுகிறது. கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. த்ரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

News January 5, 2025

காய்கறிகள் விலை மளமளவென சரிவு

image

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.12ஆகவும், முட்டைக்கோஸ் ரூ.10ஆகவும், முள்ளங்கி ரூ.13ஆகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. செள செள கிலோ ரூ.10ஆகவும், காலிபிளவர் ரூ. 15ஆகவும் விலை சரிந்திருந்தது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் ரூ.28க்கும் விற்கப்பட்டது. இதேபோல், கொத்தமல்லி கட்டு ரூ.2க்கு விற்கப்படுகிறது.

News January 5, 2025

CPI (M) மாநிலச் செயலாளராக பெ.சண்முகம்

image

CPI (M) மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழு மற்றும் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர். வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தி வெற்றிக்கண்டவர்

News January 5, 2025

ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை

image

பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு, அபராதம் விதிப்பது, பேருந்தை சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்.

News January 5, 2025

மிட் நைட்டிலா பாட அழைப்பது? ARRஐ சாடிய பாடகர்

image

Creativity என்ற பெயரில் நள்ளிரவு 3.33 மணிக்கா பாட கூப்பிடுவது என ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா சாடியுள்ளார். அதனால் தான் அவரது இசையில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டப்பிங், பாடல் என படு பிஸியாக இருந்த தன்னை, நீண்ட நேரம் வெயிட் செய்ய வைத்து, இரவு தூங்கியதும் பாட அழைத்ததாகவும், அது முதல் இது தனக்கான இடம் இல்லை என முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!