India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவில் விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சில மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், மந்தமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்களை நீக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை பலப்படுத்தவே இந்த மாற்றம் எனவும் தெரிகிறது. திமுகவில் தற்போது 72 மா.செக்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸில், 16 வார கர்ப்பிணியான Margaret Hawkins Boemer என்பவரின் வயிற்றிலிருந்த குழந்தைக்கு முதுகுத் தண்டில் tumor இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சையளித்து கட்டி அகற்றப்பட்டது. பின்னர், 20 நிமிடங்கள் கழித்து, குழந்தையை வயிற்றில் வைத்து, தாயின் Womb தைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தை மீண்டும் பிறந்தது.
TN முழுவதும் இன்று முதல் வீடுதோறும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. முன்கூட்டியே தொழு நோயாளிகளை கண்டறியவும், தொழு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக, இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வீடு- வீடாக மக்களிடம் பரிசோதனை நடத்த பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பான உணர்வுகளை கதைக்களம் மையமாக கொண்டுள்ளதாம். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை காலத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்த நிலையில், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. முதல் பகுதியின் இறுதி நாளில் புதிய வருமான வரி மசோதா, வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டன. லோக் சபாவை தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் புதிய வருமான வரி மசோதாவை FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14 வரை நடக்கிறது.
இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர்(80) நேற்று மும்பையில் காலமானார். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை தொடங்கிய இவர், தன் குரலினிமையால் ரசிகர்களை கவர்ந்தார். பிரபலமான பல கலைஞர்களுக்கு இவர் குருவாகவும் இருந்துள்ளார். பாடுவது மட்டுல்லாமல், இந்துஸ்தானி இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றது, சர்வதேச நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள் எனப் பல வழிகளில் இவர் பங்காற்றியுள்ளார்.
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பெண் நடத்துநர்களாக 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்று அரசு ஏற்கெனவே தகுதி நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அதனை தற்போது 150 செ.மீ.ஆக குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடத்துநர் பணியிடங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர ஏதுவாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் பெண் வாரிசுகளுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழகத்தில் மட்டும் 2,292 கிராம அஞ்சல் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <
Sorry, no posts matched your criteria.