news

News January 5, 2025

விஷாலுக்கு இதுதான் பிரச்னை

image

‘மதகஜராஜா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் உடல் மெலிந்து போய் காணப்பட்டார். மேடையில் கை நடுக்கத்துடன் பேசிய அவரை, படக்குழுவினர் நாற்காலியில் அமர்ந்து பேச வைத்தனர். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம், அவருக்கு என்னாச்சு.. என்னாச்சு.. என்று கேட்க, அதிகளவில் காய்ச்சல் இருந்ததாகவும், குளிரின் காரணமாக நடுக்கத்துடன் காணப்பட்டதாகவும் படக்குழு விளக்கமளித்துள்ளது.

News January 5, 2025

முதலில் விஜய், பிறகே CM ஸ்டாலின்

image

சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ. சண்முகம் இன்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு முதல் ஆளாக தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். திமுக கூட்டணியில் சிபிஎம் உள்ள நிலையில், ஸ்டாலின் முதலில் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் வாழ்த்து தெரிவித்தபிறகே ஸ்டாலின் வாழ்த்தை தெரிவித்தார்.

News January 5, 2025

இந்த முறை சாதிப்பாரா ஷங்கர்?

image

‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. அரசியல்வாதியாக எஸ்.ஜே.சூர்யாவும், கலெக்டராக ராம்சரணும் நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான மோதல், ஊழல், ஃபிளாஷ்பேக்கில் ஃபேமிலி சென்டிமெண்ட், கலர்ஃபுல்லான பாடல்கள் என இயக்குநர் ஷங்கரின் டிரேட் மார்க்காக இந்த படம் உருவாகியுள்ளது. ‘இந்தியன் 2’ ஃபிளாப் ஆனதால், கேம்சேஞ்சரை ஷங்கர் பெரிதும் நம்பியுள்ளார்.

News January 5, 2025

புறப்பட்டு ஓடும் புதன்: 3 ராசிகளுக்கு ராஜயோகம்!

image

புத்தாண்டின் முதல் வாரத்தில் புதன் பகவான் தனுசு ராசிக்கு செல்வதால் 3 ராசிகள் யோகம் பெறவுள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) சிம்மம்: தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். கல்வி சிறக்கும். வாழ்க்கை துணை ஆதரவு உண்டு. 2) துலாம்: சோகம் விலகும். தொட்ட காரியங்கள் துலங்கும். பாசிட்டிவான எண்ணங்கள் தோன்றும். 3) கும்பம்: பொருளாதாரம் உயரும். உழைப்பின் பலன்களை பெறுவீர்கள்.வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

News January 5, 2025

₹33.66 கோடியில் மாளிகையை செதுக்கிய கெஜ்ரிவால்

image

டெல்லி CMஆக கெஜ்ரிவால் இருந்தபோது, அவரது இல்லத்தை மறுசீரமைக்க முதலில் ₹7.91 கோடி நிதி ஒதுக்கிவிட்டு, பின்னர் ₹33.66 கோடியில் பணிகளை முடித்ததாக CAG ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது. திரைச்சீலைகளுக்கு ₹96 லட்சம், கிச்சன் பொருள்களுக்கு ₹39 லட்சம், ஜிம் உபகரணங்களுக்கு ₹18.52 லட்சம், பளிங்கு சுவர்களுக்கு ₹66.89 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகள் ₹18.88 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News January 5, 2025

அமெரிக்க அணுகுண்டுக்கு தப்பியவர் அமரரானார்

image

1945இல் 2ம் உலகப் போரின்போது ஜப்பானின் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், சிலர் மட்டும் உயிர் தப்பினர். அவர்களில் சிகிமி புகாஹோரியும் ஒருவராவார். அப்போது அவர் வயது 14. அணுகுண்டுக்கு தப்பிய அவர், தொடர்ந்து அமைதி, அணுஆயுதத்திற்கு எதிராக பிரசாரம் செய்தார். வயாேதிகம் காரணமாக உடல்நிலை பாதித்து ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவர் 93 வயதில் காலமானார்.

News January 5, 2025

BREAKING: கங்கை அமரன் ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

தமிழில் கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் கங்கை அமரன். இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான அவர், பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். சிவகங்கை அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கங்கை அமரன் உடனடியாக ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News January 5, 2025

வருகிற 10ஆம் தேதி ரேஷன் கடைகள் உண்டு.. மறக்காதீங்க

image

பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்குவதற்காக விடுமுறை நாளான கடந்த 3ஆம் தேதி (வெள்ளி) ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. இதேபோல், பொங்கல் தொகுப்பை வழங்குவதற்காக விடுமுறை நாளான வரும் 10ஆம் தேதியும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் உண்டு. எனவே டோக்கனில் குறிப்பிட்டபடி அன்று பொங்கல் தொகுப்பை மக்கள் வாங்கலாம்.

News January 5, 2025

முதல் ஆளாக வாழ்த்திய விஜய்

image

CPI-M புதிய மாநில செயலாளர் சண்முகத்துக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளார். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும் என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். DMK கூட்டணி தலைவர்கள் கூட இதுவரை வாழ்த்து தெரிவிக்காதபோது, முதல் ஆளாக விஜய் வாழ்த்துக்கூறி, அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளார்.

News January 5, 2025

ஞானசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்தது

image

அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நேற்று ஞானசேகரனின் வீட்டில் புலனாய்வுக் குழு நடத்திய சோதனையில், அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. குற்றத்தின் தன்மையால் இந்த வழக்கு தற்போது மிக சென்சிடிவ் ஆன ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரைப்படி, அவன் மீது 4வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

error: Content is protected !!