India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு நேர தூக்கம் உடல்நலனுக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தூக்கமானது, வயதுக்கு ஏற்ப நேர அளவு மாறுகிறது. *4 மாதங்கள் முதல் 12 மாதங்கள்: 12 – 16 மணி நேரத் தூக்கம் * 1 வயது முதல் 2 வயது: 11- 14 மணி நேரத் தூக்கம் *3 வயது முதல் 5 வயது: 10- 13 மணி நேரத் தூக்கம் *6 வயது முதல் 12 வயது: 9- 12 மணி நேரத் தூக்கம் *13 வயது முதல் 18 வயது: 8-10 மணி நேரத் தூக்கம் *18 வயதிற்கு மேற்பட்டோர்: 7 மணி நேரம்
தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வின் போது தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 மாணவ, மாணவியரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 பேரும் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.
*ஆண்/பெண் 1- 4 வயது இடைவெளி: ஏறக்குறைய ஒரே வயது என்பதால் இருவருக்குள் உச்சக்கட்ட ஈகோ நிலவும். அதிகம் டைவர்ஸ் ஆகும் தம்பதியர் இவர்களே. *4-7 வயது: வித்தியாசம் அதிகம் என்பதால், வருமானம், மெச்சூரிட்டி என லைப் சற்று எளிதாக இருக்கும். *8-10 வயது: சண்டை, சச்சரவு குறைவு, குழந்தை வளர்ப்பில் புரிதல் அதிகம். ஆனால், இந்த age gap-ஐ தற்போது விரும்புவதில்லை. வயதைவிட புரிதலே முக்கியம் என்கின்றனர். உங்க கருத்து?
வேலைவாய்ப்பு அளிப்பதற்காக 18.4 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா மூலம் 2022 முதல் மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் 2019-2020ஆம் ஆண்டில் மட்டும் 42,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் எழும் போது, ஜனாதிபதிக்கு ஆளுநர் அறிக்கை அளிப்பார். இதன் பேரில், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரைக்கேற்ப 356(1) சட்டப்பிரிவின் கீழ் <<15453079>>ஜனாதிபதி ஆட்சி<<>> அமல்படுத்தப்படும். அதன்பிறகு, ஜனாதிபதியின் மேற்பார்வையில் ஆளுநர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார். ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமலில் இருக்கும். தேவைப்பட்டால், நாடாளுமன்ற ஒப்புதலுடன் 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சி இருக்கும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் கம்பீர் விளக்கமளித்துள்ளார். மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் பவுலர் தேவை என்பதால், ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் பந்துவீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், அணியின் வெற்றிக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கம்பீர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் IMD கூறியுள்ளது. இதேபோல், வருகிற 15ஆம் தேதியும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2- 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி? கீழே பதிவிடுங்க.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் வெடித்தது. அதை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையால், பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த கலவரம் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலவரத்தில் ஏறத்தாழ 1,400 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் தெறி ஹிட் அடித்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான சுப்ரீம் சுந்தர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு வரும் ரசிகர்கள், விக்ஸ் அல்லது ஹால்ஸ் உடன் தான் போக வேண்டும். இல்லையெனில், கத்தி கத்தி தொண்டை வலி வந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
அன்புடன் முத்தமிடும் போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதேநேரம், மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிட்டுக் கொள்ளும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.