India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் இந்திய வருகை இரு தரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது குறித்து ஜே.டி.வான்ஸிடம் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என வெளியுறவு செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே வரும் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணி, ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை வியாசர்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியின் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச சைகையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் பலர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். பின்னர், அவரை பிடிக்க பரிசுத் தொகை அறிவித்து தேடி வந்த நிலையில், முனுசாமி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஜூன் 22ஆம் தேதி ‘குன்றம் காக்க, கோவிலை காக்க’ என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில் நடிகர் ரஜினியை பங்கேற்க வைக்க இந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்து, மாநாட்டிற்கான அழைப்பிதழை இந்து முன்னணி கட்சியினர் வழங்கினார். அரசியலில் இருந்து விலகினாலும், சமீப காலமாக அவரின் பேச்சுகள் அரசியலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வெய்பாங் நகரில் நடந்து வரும் சர்வதேச பட்டம் விடும் போட்டியில், தமிழகத்தின் பட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், காளை மாடு வடிவிலான பட்டம் பறக்கவிடப்பட்டது. தவிர, மூவர்ண கொடி தாங்கி தமிழ்நாடு, இந்தியா என்று பொறிக்கப்பட்ட பட்டமும் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.
கூட்டாட்சி தத்துவத்தை குலைத்து, டெல்லியில் அதிகாரத்தை அதிகரிக்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழகம் அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்கான இப்போராட்டத்தில் மற்ற மாநிலங்கள் இணையும் என நம்புவதாகவும், வலுவான மாநிலங்களால்தான் வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் எனவும் கூறினார். மேலும், மத்திய – மாநில அரசுகளுக்கான உறவுகளில் சமநிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
தங்கம் விலை <<16166177>>இன்று<<>> (ஏப்.21) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹9,015-க்கும், சவரன் ₹72,120-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 1 கிராம் ₹9,834-க்கும், 8 கிராம் ₹78,672-க்கும் விற்பனையாகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹2,360 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மார்ச் 28 – ஏப்.14 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், SSLC விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் சற்றுமுன் தொடங்கியுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பணி நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் ₹72,000-ஐ கடந்துள்ளது. இன்று (ஏப்.21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹9,015-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹111க்கும் விற்பனையாகிறது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க TN அரசு டெண்டர் கோரியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என 2024 பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ₹34 கோடி செலவில், மினி டைடல் பூங்கா அமையவுள்ளது. ஓராண்டில் கட்டி முடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.