news

News October 30, 2025

கூலி படத்தை வறுத்தெடுத்த பாக்யராஜ்

image

PAN Indian படம் என்பதற்காக அந்தந்த ஊரில் இருந்து ஸ்டார்களை இறக்கினால் மட்டும் படம் ஓடுமா என பாக்யராஜ் விமர்சித்திருக்கிறார். என்னதான் PAN இந்தியா படம் என்றாலும், கதை இருந்தால்தானே படம் ஓடும் எனவும், இல்லையென்றால் எவ்வளவு பட்ஜெட் போட்டாலும் பிரயோஜனம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், கூலி படத்தை தாக்கி பேசிய அவர் ஆமிர்கான் கூட அந்த படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டார் என்று கூறியுள்ளார்.

News October 30, 2025

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்

image

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில், 9 பெண்கள் உட்பட 51 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். இவர்களில் 20 பேரின் தலைக்கு ₹66 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சத்தீஸ்கரில் டிச.2023 முதல் தற்போது வரை 2,250 பேருக்கும் மேல் சரணடைந்துள்ளனர்.

News October 30, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1800 குறைந்து ₹88,800-க்கும், கிராமுக்கு ₹225 குறைந்து ₹11,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 30, 2025

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…

image

4,662 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்று, அதன் முடிவுகள் அக்.22-ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

ஃபிலிம்பேர் விருது சர்ச்சை: அபிஷேக் பச்சன் வேதனை

image

’I want to talk’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை நடிகர் அபிஷேக் பச்சன் வென்றிருந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்திதான் அவர் விருதை வாங்கினார் என SM-ல் பலர் விமர்சித்தனர். இந்நிலையில், எந்த விருதையும் பிஆர் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், உங்களை அமைதிப்படுத்த இன்னும் கடினமாக உழைப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

News October 30, 2025

காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் மரணம்? விளக்கம்

image

நாமக்கல் தனியார் கல்லூரி விடுதியில் கடந்த திங்கள்கிழமை காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சில மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்துள்ள தமிழக அரசின் Fact Check, மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ளனர். எனவே, உயிரிழந்ததாக பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளது.

News October 30, 2025

NDA கூட்டணி CM வேட்பாளர் யார்? அமித்ஷா பதில்

image

பிஹார் தேர்தலில் NDA வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். CM வேட்பாளரை தேர்வு செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளதாக கூறிய அவர், தேர்தலுக்கு பின் அவர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என கூறினார். ஆனால், தற்போதைக்கு நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தலை சந்திக்கிறோம் என்றார். இதனால், பிஹாரின் நீண்டகால CM நிதிஷ்குமார் மீண்டும் CM-ஆக தேர்வாகமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News October 30, 2025

இந்தியாவை உலுக்கிய டாப் ஊழல்கள்!

image

உலகின் மிகபெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஊழல் விவகாரங்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி இந்தியாவை உலுக்கிய டாப் 5 ஊழல் சம்பவங்களை பட்டியலிட்டுள்ளோம். அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்ள மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த பட்டியலில் இன்னும் என்னென்ன ஊழல்களை சேர்க்கலாம்.. நீங்க கமெண்ட் பண்ணுங்க?

News October 30, 2025

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!

image

சபரிமலை சீசனை முன்னிட்டு, நவ.16 முதல் ஜன.16 வரை சிறப்பு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை (கோயம்பேடு & கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் முதல் Non AC sleeper வசதி கொண்ட பஸ்கள் வரை இயக்கப்படவுள்ளன. டிச.27 முதல் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் டிச.29 வரை இந்த பஸ்கள் இயக்கப்படாது.

News October 30, 2025

சற்றுமுன்: 104 பேர் மரணம்

image

இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் மீறப்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் குண்டுகளை மழை பொழிந்துள்ளது. இந்த கொடூர தாக்குதல்களில் அப்பாவி 104 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் காயமடைந்தனர். ஹமாஸ் தனது சிப்பாயை கொன்ற பிறகு பயங்கரவாதக் குழுக்களை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால், இந்த குற்றசாட்டுகளை ஹமாஸ் அமைப்பு மறுத்துள்ளது.

error: Content is protected !!