India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிரஞ்சீவி நிலைதான் <<17519703>>விஜய்க்கும் <<>>என எதிர்க்கட்சியினர் ஆருடம் சொல்கின்றனர். சிரஞ்சீவிக்கு என்ன ஆனது? *1992 முதல் திட்டமிட்டு 2008-ல் சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை தொடங்கினார் * 2009 தேர்தலில் சிரஞ்சீவி (திருப்பதி) உள்பட 18 பேர் மட்டுமே வென்றனர் * YSR மறைவுக்கு பிறகு 2011-ல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய இணையமைச்சர் ஆனார் * 2014 ஆந்திர பிரிவினைக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
இன்று மாலை 4.50 – 5.50 வரை அல்லது மாலை 6.30 – இரவு 8.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6.00 – 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம். நாளை விநாயகர் சிலை வாங்கினால், மதியம் 1.35 – 2.00 மணி வரை அல்லது மாலை 6.10 மணிக்கு மேல், சுண்டல், கொழுக்கட்டை, சாதம், பாயசம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபாடு செய்யலாம்.
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி USA-வில் நடந்து வருகிறது. இதன் 6-வது சுற்றில் போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்வை சந்தித்த பிரக்ஞானந்தா, 32-வது நகர்த்தலில் டிரா செய்தார். இத்தொடரின் முதல் சுற்றில் மட்டுமே வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா இதுவாகும். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 4.5 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்தில் உள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’அன்பின் கை’ அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று. அன்னை தெரசா எனும் ஆக்னஸ் பிறந்தது என்னவோ ஆக.26, 1910-ல் தான். ஆனால் அவரோ ஆக.27-ஐ தான் தன்னுடைய பிறந்தநாளாக கருதி வாழ்ந்துள்ளார். தெரசா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவர் பிறந்த அடுத்த நாளிலேயே (ஆக.27) ஞானஸ்நானம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மீதிருந்த அதீத பக்தியால் ஞானஸ்நானம் எடுத்த தினத்தையே தன்னுடைய பிறந்தநாளாக அவர் கருதியுள்ளார்.
இமாச்சலில் பள்ளி நிகழ்வு ஒன்றில் பேசிய MP அனுராக் தாகூர் விண்வெளிக்கு முதல்முதலில் சென்றது அனுமன் என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, இதிகாசங்களில் நிலவுக்கு அனுமன் சென்றதாக பதிவுகள் உள்ளன. ஆகையால் அவரது கருத்தில் தவறில்லை என்றார். ராமர் என்ன இன்ஜினியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
சென்னையில் பாமக சார்பில் விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அன்புமணி, திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 என்றும், அரைக்குறையாக நிறைவேற்றப்பட்டவை 66, முழுமையாக நிறைவேற்றப்படாதவை 373 என்றார். திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
✪காலை <<17520101>>உணவுத் <<>>திட்டத்தை விரிவுப்படுத்திய CM ஸ்டாலின்!
✪விஜய்காந்த் நிலை <<17519989>>விஜய்க்கும் <<>>வரலாம்.. செல்வப்பெருந்தகை
✪தங்கம் <<17520504>>விலை <<>>சவரனுக்கு ₹400 உயர்வு
✪இந்தியா <<17520480>>மீதான<<>> 50% வரி.. இடியை இறக்கிய USA
✪RCB <<17519842>>அணிக்கு <<>>திரும்ப ரெடி.. ABD
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள இப்பவே பணம் சேமிக்கிறீங்களா? மாதம் வெறும் ₹210 கட்டினால், 60 வயதான பிறகு மாதம் ₹5000 பென்ஷனாக வழங்குகிறது அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம். 18-40 வயதிற்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர அருகிலுள்ள வங்கி/தபால் நிலையத்திற்கு சென்று, APY படிவத்தை நிரப்பி உரிய ஆவணத்துடன் சமர்ப்பியுங்கள். இதற்கான தொகையை npscra.nsdl.co.in வழியாக செலுத்தலாம். SHARE IT.
Sorry, no posts matched your criteria.