news

News January 5, 2025

கங்கை அமரன் PHOTO வெளியானது

image

சிவகங்கையில் படப்பிடிப்பின் போது இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின் அவர் சட்டையை போடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரும் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

தனியாக இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

image

சிலர் எப்போது பார்த்தாலும் தனியாகவே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, டிப்ரஷன் போன்ற மனம் சார்ந்த நோய்களை மட்டுமல்லாமல் இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை உருவாக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வில் தெரியவந்துள்ளது. SHARE IT.

News January 5, 2025

நாம் இறந்துபோனதை நம்மால் உணர முடியுமா?

image

இறந்ததற்கு பிறகு எதுவுமே நமக்கு தெரியாது என்றுதானே நினைக்கிறோம். ஆனால், அப்படி கிடையாது என கூறுகிறது புது ஆய்வு. அதாவது, நாம் இறந்த பிறகும் என்ன நடக்கிறது என்று மூளைக்கு தெரியுமாம். அதாவது, நாம் இறந்துவிட்டோம் என மற்றவர்கள் கூறுவதும் நமக்கு தெரியும். ஆனால், மூளை இயக்கம் நின்றுவிட்டதால் நம்மால் உடலை அசைக்க முடியாதாம். ஆனால், இந்த உணர்வு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

News January 5, 2025

விளிம்பு நிலை மக்களுக்காக உழைத்தவர்: உதயநிதி

image

CPI-M புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்துக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மலைவாழ் பழங்குடியினர், விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு உழைத்ததற்காக தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றதை குறிப்பிட்டுள்ள உதயநிதி, மக்கள் பணியை அவர் தொடர்ந்து சிறப்பாக செய்வார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 5, 2025

சிரியாவில் சண்டை: 101 பேர் பலி

image

சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு துருக்கி ஆதரவு குழுக்களுக்கும், சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில், 2 நாள்களில் மொத்தம் 101 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியானோரில் 85 பேர் துருக்கி ஆதரவு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 16 பேர் சிரியாவை சேர்ந்த குர்து படையினர் என்றும் கூறப்படுகிறது.

News January 5, 2025

₹3200,00,00,000 வசூல் செய்த ‘முபாசா’

image

‘முபாசா: தி லயன் கிங்’ ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் நேற்றுவரை ரூ.3200 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.150.5 கோடி வசூலை எட்டியுள்ளது. ஹிந்தி வெர்சன் ரூ.46.98 கோடி, தமிழில் ரூ.23.65 கோடி, தெலுங்கில் ரூ.16.84 கோடி வசூல் செய்துள்ளது. டிச.20 வெளியான படம், 16 நாள்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. குழந்தைகளுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்ததால், படம் பெரிய வெற்றி பெற்றது. நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

News January 5, 2025

கோலி, ரோஹித் ஓய்வு? கம்பீர் சொன்ன தகவல்

image

அணியின் நலனை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறுவது குறித்து கோலியும், ரோஹித்தும் முடிவு எடுப்பார்கள் என கம்பீர் தெரிவித்துள்ளார். 5ஆவது டெஸ்ட்டில் இருந்து விலகும் முடிவில், ஒரு கேப்டனாக ரோஹித் மெச்சூரிட்டி காட்டியதாகவும், ஆனால் அதைவிடுத்து சிலர் அர்த்தமற்ற விவாதங்களை கிளப்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அணிக்காகவே ரோஹித் அப்படி செய்ததாகவும் பாராட்டியுள்ளார்.

News January 5, 2025

FD வட்டியை உயர்த்திய SBI, HDFC

image

நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான SBI, 80 வயதுக்கும் மேற்பட்டோருக்கு FD வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வட்டியை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டியை உயர்த்தியுள்ளது. இதேபோல், தனியார் வங்கியான எச்டிஎப்சியும் 5-10 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வட்டி, ரூ.5 கோடி, அதற்கும் மேல் டெபாசிட் செய்வோருக்கே பொருந்தும்.

News January 5, 2025

திருமணமாகாத ஆண்- பெண் ஒன்றாக தங்கலாமா?

image

மணமாகாத ஆண், பெண் ஒன்றாக ஹோட்டலில் தங்கலாமா என்ற கேள்விக்கு OYO வெப்சைட்டில் உள்ள பதில்: ‘ஆம். எந்த நாட்டிலும் அதற்கு தடையில்லை. ஆனால் அவர்களை Check-In செய்ய அனுமதிப்பது Hotel ஓனர்களின் உரிமை’. 2013-ல் OYO அறிமுகமானபோது அதன் வெற்றிக்கு காரணம் Couple Friendly Policy. தற்போது <<15071522>>புதிய ரூல்<<>> கொண்டு வரப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக தடை இல்லாதபோது, OYO-வின் புதிய விதி சரியா எனக் கேட்கின்றனர் நெட்டிசன்கள்.

News January 5, 2025

ஏர்போர்ட் கூட இல்லாத 5 நாடுகள்..

image

விண்வெளியில் வீடு கட்டலாமா, செவ்வாய்க்கிரகத்தில் செல்போன் டவர் அமைக்கலாமா என உலக நாடுகள் ஓடிக் கொண்டிருக்க, இந்த 5 நாடுகள் ஏர்போர்ட் கூட இல்லாமல் உள்ளன. வாடிகனில் ஏர்போர்ட் கிடையாது. அங்கு செல்வோர், இத்தாலியின் ரோமில் இறங்கியே வாடிகனுக்கு செல்ல முடியும். அதேபோல, லைச்டென்ஸ்டெய்ன், அன்டோரோ, மொனாக்கோ, சான் மாரினோ நாடுகளிலும் ஏர்போர்ட் இல்லை. இடப்பற்றாக்குறையும், பூளோக அமைப்புமே இதற்கு காரணமாம்.

error: Content is protected !!