India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு SPG ஆகும். பிரதமர் உள்ளிட்ட VVIPகளுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு ₹1.34 கோடியும், ஒரு மணி நேரத்திற்கு ₹5.58 லட்சமும் செலவாகும். ஆண்டுக்கு தோராயமாக ₹600 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் நிதியும் தனியாக ஒதுக்கப்படுகிறது. 2025–26 நிதியாண்டில் ₹489 கோடி ஒதுக்கப்பட்டது.
CT தொடருக்காக IND அணி துபாய் செல்ல உள்ள நிலையில், BCCIன் புதிய கட்டுப்பாடுகள் வீரர்களுக்கு மட்டுமின்றி, கம்பீரையும் பதம் பார்த்துள்ளன. புதிய விதிகளின் படி, பயிற்சியாளர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் அணியினர் தங்கும் ஹோட்டல்களில் தங்கவோ, வீரர்கள் செல்லும் வாகனங்களில் பயணிக்கவோ கூடாது. இதனால், கம்பீரின் உதவியாளர் வெளியில் தங்கி, வெளி வாகனங்களில் பயணிக்க வேண்டிய கட்டாயமுள்ளது.
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முதல் பாடல் ‘உயிர் பத்திகாம’ இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கியுள்ள இப்படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி நடிக்க, அவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பதான்கோட் தாக்குதல் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அத்தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தி, எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். அதில் புல்வாமாவில் 2019இல் பலியான துணிச்சலான ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால சந்ததியினர், அவர்களின் தியாகம், நாட்டுக்கான அர்ப்பணிப்பை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் இன்று அதிகாலை 3 இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்டது உழவர்கரையை சேர்ந்த பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி, அவரது நண்பர்கள் தேவா மற்றும் ஆதி என்பது தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் மூவர் கொல்லப்பட்டதாகவும், பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்க்கு தரப்பட்டுள்ள Y பிரிவில் ஆயுதமேந்திய காவலர் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருப்பார். 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவரும், ஸ்டென் கன் – உடன் ஒருவரும் என 2 பாதுகாப்பு ஆபீசர்ஸ் உள்பட 11 பேர் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு தருவார்கள். இதற்காக மாதம்தோறும் தோராயமாக 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதனை அரசு ஏற்காது. விஜய் செலவிட வேண்டும்.
விஐபிக்களின் பாதுகாப்புக்காக X, Y, Y+, Z, Z+ என்ற பிரிவுகள் உள்ளன. X பிரிவில் ஆயுதம் தாங்கிய 2 காவலர்கள் இருப்பார்கள். Y பிரிவில் 8 காவலர்கள் இருப்பார்கள். Y+ பிரிவில் கமாண்டோக்களுடன் 11 காவலர்கள் இருப்பார்கள். Z பிரிவில் 22 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். Z+ பிரிவில் NSG டீம் பாதுகாப்பு அளிக்கும். 22 security ஆபீசர்ஸின் பாதுகாப்பு வளையத்துடன் குண்டு துளைக்காத காரும் உடன் செல்லும்.
இன்று காதலை போற்றும் ஸ்பெஷல் தினம். மக்களிடையே காதல் உணர்வை அதிகரிக்க செய்வதில் சினிமாவிற்கும் பங்குண்டு. அந்த சினிமாவிலேயே ரீல் ஜோடிகளாக நடித்து பின்னர் ரியல் ஜோடிகளாக மாறிய பிரபலங்களும் உண்டு. அந்த லிஸ்ட்டில் அஜித்- ஷாலினி, சுந்தர்.சி- குஷ்பு, சூர்யா- ஜோதிகா, பாக்கியராஜ்- பூர்ணிமா, பிரசன்னா- சினேகா, விக்கி- நயன், ஆதி- நிக்கி கல்ராணி, சித்தார்த்- அதிதி ராவ், ஆர்யா- சாயிஷா ஆகியோர் அடங்குவர்.
உடல்ரீதியான தொடர்பு இல்லாத நிலையில், மனைவி இன்னொருவரை காதலிப்பது, கள்ள உறவு ஆகாது என ம.பி. HC தீர்ப்பளித்துள்ளது. மாதம் ரூ.4,000 ஜீவனாம்சம் கோரி மனைவி வழக்குத் தொடுத்த நிலையில், அவர் இன்னொருவரை காதலிப்பதால் அளிக்க முடியாது என கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தீர்ப்பளித்த HC, செக்ஸ் இன்றி இன்னொருவரை மனைவி காதலிப்பது முறைதவறிய உறவு ஆகாது எனக் கூறி, ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டது.
சுதந்திரத்திற்காக போராடிய புரட்சிக் கவி பாரதி, தனது எழுத்தில் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். காதலை உணர, காதலியை அடைய ஒவ்வொருவருக்கும் பாரதி தேவைப்படுகிறார். ‘‘சுட்டும்விழிச் சுடர்தான், – கண்ணம்மா! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி, – கண்ணம்மா! வானக் கருமைகொல்லோ?’’ பாரதியின் இந்த வரிகள் காதலை போற்றும் ஒவ்வொருவர் மனதிலும் தென்றலை வீசிச் செல்லும்.
Sorry, no posts matched your criteria.