India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் மர்மக் காய்ச்சலால் 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்தன. ஆய்வு செய்ததில், அவை ஏவியன் ஃப்ளூ (Avian flu) என்ற புதிய வகை வைரஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பூனை இன விலங்குகள் அனைத்தையும் தனிமைப்படுத்துமாறு (Quarantine) மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷி தவான் சர்வதேசம்,. உள்நாட்டு டி20 & ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 3 ODI, 1 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில், இதுவரை 39 போட்டிகளில் பஞ்சாப், மும்பை, கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். ஓய்வு பெற்றாலும், தான் தொடர்ந்து ரஞ்சி தொடரில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா சரிந்ததால் பண்ணை உரிமையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நேற்று வரை ₹5.05 என்று மொத்த விலையில் விற்கப்பட்டுவந்த முட்டை, இன்று ₹4.80ஆக குறைந்துள்ளது. விற்பனை மற்றும் நுகர்வு குறைந்ததால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சில்லரை விலையில் ₹7 வரை விற்கப்பட்டுவந்த முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது.
உங்களின் ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் * myAadhaar போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் Log in செய்யவும் * மெனுவில் ‘Authentication History’ தேர்ந்தெடுக்கவும் * ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியலாம் * அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், உதவி எண் 1947ஐ டயல் செய்யவும், அல்லது help@uidai.gov.in க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
மகனுடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படங்களை அமலா பால் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், தனது நீண்ட கால நண்பர் ஜெகத் தேசாயை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு ’இலய்’ என்று பெயர் சூட்டியுள்ள அவர்கள், மகன் வேட்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படங்களை அவர் வெளிட்டுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காத ஆளுநர், சில கருத்துகளை கூறிவிட்டு அமர்ந்தார். தொடர்ந்து, சபாநாயகர் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதையறிந்த ஆளுநர், அவையை புறக்கணித்து சென்றார். இந்நிலையில், இன்று அரசு தயாரித்த உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை செல்வராஜ் (59) வேலை தேடி வெளியூருக்குச் சென்றார். பல நாள்கள் அவர் திரும்பி வராததால் உறவினர்கள் தேடத் தொடங்கினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள ஆற்றில் கிடந்த சடலத்தை செல்வராஜ்தான் என்று எண்ணி தகனம் செய்தனர். பின்னர் ஒருநாள் வேலை தேடிச் சென்ற செல்வராஜ் உயிரோடு வீடு திரும்பினார். இதனால், அதிர்ச்சியான உறவினர்கள் தகனம் செய்யப்பட்ட உடல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
TNல் காங். கட்சியை பலப்படுத்தும் வகையில், புதியவர்களை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில், மாவட்டத் தலைவர் பதவிக்கு ₹5,000, மாநில நிர்வாகிகள் பதவிக்கு ₹1,000 என போட்டியிடுவோர் நன்கொடையாக செலுத்துமாறு செல்வப்பெருந்தகை அறிவித்தது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நன்கொடை கட்டாயம் கிடையாது, விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு WTC தொடரில் இருந்து வெளியேறிய இந்தியாவின், அடுத்த WTC 2025-27 அட்டவணை வெளிவந்துள்ளது. ஜூனில் இங்கி. எதிராக 5 டெஸ்ட், அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட், நவம்பரில் SAவிற்கு எதிராக 2 டெஸ்ட், ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட், 2026 அக்டோபரில் NZ க்கு எதிராக 2 டெஸ்ட், 2027 ஜனவரியில் 5 டெஸ்ட் (BGT தொடர்) ஆஸி.க்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹1000 பணம் வழங்குவது குறித்து CM ஸ்டாலின் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் வழங்காததற்கு எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட CM, வேறு ஏதேனும் திட்ட செலவை குறைத்து பணம் வழங்கலாமா என பரிசீலித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.