news

News February 15, 2025

மாணவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ பாய்ந்தது

image

கிருஷ்ணகிரியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருமணத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் கலந்து கொண்டபோது, ஆசிரியர் ஹூசேன் கழிவறைக்கு அழைத்து சென்று தொல்லை அளித்துள்ளார். மாணவன் தற்கொலைக்கு முயல, ஹூசேனை பிடித்து போலீசில் பெற்றோர் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் அவரைக் கைது செய்தது.

News February 15, 2025

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது: வாடிகன்

image

போப் ஆண்டவர் பிரான்சிஸின் உடல்நிலை சீராக இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோமில் உள்ள ஹாஸ்பிட்டலில் போப் பிரான்சிஸ் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், உடல்நிலை குறித்து வாடிகன் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், போப் பிரான்சிஸூக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

News February 15, 2025

லவ்வர்ஸ் டே: ஆன்லைன் ஆர்டரில் இது தான் ஃபர்ஸ்ட்!

image

நேற்று லவ்வர்ஸ் டேயில் சாக்லேட், ரோஜா என பலரும் தங்களது லவ்வரை சர்ப்ரைஸ் செய்தனர். Swiggy நிறுவனத்தில் நேற்று வந்த ஆர்டர்கள் குறித்து அதன் இணை நிறுவனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்சபட்சமாக ஒரே நிமிடத்தில் 581 சாக்லேட்டுகளும், 324 ரோஜாப்பூக்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. காதலுக்கென ஒரு ஸ்டாக் மார்க்கெட் இருந்தால், அது பெரும் வெற்றி அடையும் என்றும் அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

News February 15, 2025

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது

image

மகளிர் உரிமைத்தொகையின் 18ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் சுமார் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இதில், விடுபட்ட தகுதி வாய்ந்த பயனாளர்களை இணைக்கும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கும் என நேற்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்திருந்தார். உங்கள் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத்தொகையின் ரூ.1000 வந்ததா? கமெண்ட்ல சொல்லுங்க.

News February 15, 2025

தமிழகத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சாராயம்: அண்ணாமலை

image

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே ஆளும் அரசுக்கு மனசாட்சி உள்ளதா என வினவியுள்ளார். மேலும், துருப்பிடித்த இரும்புக் கையை வைத்துக் கொண்டு தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்துவதாக CM ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

News February 15, 2025

வகுப்பறையை வங்கியாக மாற்றிய டீச்சர்

image

பொருளாதாரம் பற்றி குழந்தைகள் எளிமையாக புரிந்து கொள்ள ஆசிரியர் ஒருவர் மாற்றி யோசித்திருக்கிறார். இதற்காக வகுப்பறையை மினி வங்கியாக செட்–அப் செய்தார். கேஷியர், மேனஜராக குழந்தைகளை அமர வைத்தார். FAKE MONEY கொடுத்து டெபாசிட் ஸ்லிப்கள் மூலம் டெபாசிட் செய்ய வைத்தார். சிக்கலான விஷயத்தை அனுபவ பாடமாக புரிய வைத்த இந்த ஆசிரியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அனுபவமும் சிறந்த பாடம் தான்!

News February 15, 2025

முதல்வருக்கு காட்டமாக கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்

image

கடந்த சில தினங்களில் TNல் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை குறைந்தபட்சம் ஒப்புக் கொள்வீரா முதல்வரே என பா.ரஞ்சித் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உங்களது ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MPகளுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால், நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News February 15, 2025

கண்களை பாதுகாக்கும் 20-20-20 ரூல்!

image

கம்ப்யூட்டர், போன் ஸ்கிரீன் டைம் கண்களை மிகவும் சோர்வடையச் செய்கின்றன. அதிக ஸ்கிரீன் டைமால் தலைவலி, பார்வை மங்குதல், வறட்சி, கண் சிவத்தல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. இதனால்தான் 20-20-20 விதியைப் பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 20 நிமிடங்கள் ஸ்கிரீனை பார்த்த பிறகு, முகத்தைத் திருப்பி 20 அடி தூரத்தில் 20 விநாடிகள் பார்த்தால், Strain குறையும் என்று கூறுகின்றனர். ட்ரை பண்ணி பாருங்க!

News February 15, 2025

8 நாளில் ரூ.27 லட்சம் கோடி இழப்பு!

image

இந்திய பங்குச்சந்தைகள் சில நாட்களாகவே வீழ்ச்சியடைந்து வருகிறது. பிப்.5ல் சந்தை மூலதனத்தின் மதிப்பு ரூ.42,80,3611.66 கோடியாக இருந்தது. ஆனால், அடுத்த 8 நாளில் இது ரூ.40,09,9281.11 கோடியாக வீழ்ச்சியடைந்தது. இதனால், ரூ.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது, அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் ஆகியவையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

News February 15, 2025

டிகிரி போதும்… மத்திய அரசில் வேலை.. ₹72,000 வரை சம்பளம்!

image

உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர், ஆராய்ச்சி அசோசியேட்கள் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட யூனிவர்சிட்டியில் சட்டத்தில் Masters பட்டம் பெற்று, வக்கீலாக பதிவு செய்திருக்க வேண்டும். 20 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 நிலை தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ₹72,000 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரம் அறிய <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

error: Content is protected !!