India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் செல்வார்கள் என்பதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க 14,104 சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்தியன் 2 படம் லைகாவிற்கு பெரும் நஷ்டம். இந்தியன் 3ம் பாதியில் நிற்கிறது. அப்படத்தை முடித்து கொடுக்காமல், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பில் புகார் அளித்துள்ளது. 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், இன்னும் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சரின் திரையரங்க ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளுநர் ரவியை ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். சட்டப்பேரவையில் அரசின் உரையை ஆளுநர் வாசிப்பது ஜனநாயக மரபு, அதை மீறுவதையே வழக்கமாக வைத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார். இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் ஆளுநராக ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என வினவியுள்ளார்.
ஜாலியாக பொழுதை கழிக்கும் லீவால் Brain Fog, அதாவது தூக்கமின்மை, பதற்றம், கவனக்குறைவு, அதிகப்படியான stress ஏற்படும். லீவில் வழக்கத்திற்கு மாறான நேரங்களில் தூங்குவது, சாப்பிடுவது, மது அருந்துவது என இருப்பதால் இந்த Brain Fog உண்டாகிறது. இதனை சரிசெய்ய தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது, Stress மேனேஜ்மென்ட் பயிற்சிகள் செய்வது, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட மனநல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை கீழ்வேளூர் தொகுதியில் 1.76 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். அதேபோல், மாவட்ட அளவில் சென்னையில் 40.1 லட்சம் (40,15,878) வாக்காளர்களும், குறைந்தபட்சமாக அரியலூரில் 5.2 லட்சம் (5,28,691) வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 6.36 கோடி (6,36,12,950) ஆவார்கள். அதில் ஆண்கள் 3.11 கோடி (3,11,74,027), பெண்கள் 3.24 கோடி (3,24,29,803), 3ம் பாலினத்தவர் 9,120 ஆவார்கள். இதன் மூலம், ஆண்களை விட பெண் வாக்காளர்களே தமிழகத்தில் அதிமாக உள்ளது தெரியவந்துள்ளது.
செப்டிக் டேங்கில் இறந்துகிடந்த <<15078884>>செய்தியாளர் முகேஷ் சந்திரசேகர்<<>>, யூடியூப் மூலம் மாதம் ₹20,000 மட்டுமே லாபமாக ஈட்டி வந்துள்ளார். ₹2,200 வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்த அவர், மாவோஸ்ட்களின் அட்டகாசம், போலீசாரின் அடக்குமுறை ஆகியவை குறித்து செய்தி வெளியிட்டு வந்தார். அப்பகுதியில் ரோடு காண்ட்ராக்டில் ஊழல் நடந்ததாக செய்தி வெளியிட்டதால் இக்கொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்தியாவில் HMPV வைரஸ் தொற்றுக்கு 3வது கேஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெங்களூருவில் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குஜராத்தில் 2 மாத குழந்தைக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தற்போது அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் கொலை செய்யப்பட்ட <<15062164>>செய்தியாளர் முகேஷ் சந்திரகர்<<>> நரக வேதனையை அனுபவித்து இறந்ததாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அவரது தலையில் 15 எலும்பு முறிவு, 4 நெஞ்சு எலும்பு முறிவு, கழுத்து எலும்பு முறிவு ஆகியவை இருந்துள்ளன. கல்லீரல் (Liver) 4 துண்டுகளாக இருந்துள்ளது. இருதயம் வெளியே பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையை பார்த்ததே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
➥ டைம் பாஸாக அல்லாமல், உண்மையாக இணைந்திருக்க விரும்ப வேண்டும் ➥ துணையின் கட்டாயத்தின் பேரில் உறவில் இல்லாமல், ஹெல்தியானதாக இருக்க வேண்டும் ➥ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் ➥ நீங்கள் மட்டுமே இந்த உறவை நீடிக்க செய்ய முயலுகிறீர்கள் என தோன்றிட கூடாது ➥ எப்போதும் Dramaticஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றிற்கு எதிர்மறையான சிந்தனை இருந்தால், அது Situationship மட்டுமே.
Sorry, no posts matched your criteria.