India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அவர், உறையூர் வெக்காளி அம்மன் கோயில் திருவிழாவில் வழங்கிய சுகாதாரமற்ற குளிர்பானத்தை குடித்ததால் தான் பலருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டதாகவும், குடிநீரில், கழிவுநீர் கலக்கவில்லை என்றும் கூறினார்.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டால் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டணி கதவை திமுக அடைத்ததால் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, தவெக இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதத்துடன் அன்புமணியின் ராஜ்யசபா MP பதவிக்காலம் நிறைவடைவதால் மீண்டும் பாமகவுக்கு MP சீட்டு, 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். அதேநேரம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என தவெகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாம்.
சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு மே 12-ம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். இதனால், அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படாது. ஏற்கனவே மே 10 (சனிக்கிழமை), மே 11 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தொடர்ந்து 3 நாள்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக EX நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த 2024ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ED தனியாக வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் 12வது நபராக இயக்குநர் அமீரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
மூடநம்பிக்கையை ஒழிக்க அரசு சிறப்பு சட்டம் கொண்டு வருமா என்று சட்டப்பேரவையில் திமுக MLA டாக்டர் எழிலன் கேள்வி எழுப்பினார். அதற்கு, சட்டத்தின் மூலமாக எதையும் கொண்டுவந்து ஒன்றை தடுப்பதோ, பாதுகாப்பதோ இயலாத காரியம். நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம், அதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களை கட்டாயப்படுத்துவது ஏற்றுக்கொள்வதாக இருக்குமா என்பதை பார்த்துதான் சொல்ல வேண்டும் என அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.
அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கோல் கீப்பரும், தேசிய அணியின் முன்னாள் நட்சத்திர விளையாட்டு வீரருமான ஹ்யூகோ ஆர்லாண்டோ காட்டி(80) உடல் நலக்குறைவால் காலமானார். அர்ஜென்டினா அணிக்காக 1962-1988 வரை 765 போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக 1977-ல் ‘கோபா’ கோப்பையை வென்ற போகோ ஜூனியர்ஸ் அணியில் அசத்தியிருந்தார். கால்பந்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேல்முருகன் இபிஎஸ்-க்கு ஆதரவாக பேசியது அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. கடந்த சில நாள்களாகவே வேல்முருகனுக்கும், திமுகவினருக்கும் இடையிலான உறவு சுமுகமாக இல்லை. இந்நிலையில், பாஜக உடன் கூட்டணி வைத்தாலும், EPS-இன் உள்ளார்ந்த எண்ணம் இஸ்லாமியர்களுக்கு எதிராக சிந்திக்காது என்று கூறியுள்ளார். இது புதிய கூட்டணிக்கு அச்சாரமா என கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு(அன்னை இல்லம்) ஜப்தி உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய கடந்த மாதம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அந்த உத்தரவை ரத்து செய்துள்ளதோடு நடிகர் பிரபு தான் அந்த இல்லத்திற்கு முழு உரிமையாளர் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் சலுகை அளிக்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆவேசமடைந்துள்ள சீனா, இப்படியான உடன்பாடு எட்டப்பட்டால் தக்க பதிலடி தரப்படும் என அமெரிக்காவை நேரடியாக எச்சரித்துள்ளது. மேலும், ஒருதலைபட்சமான இந்த அழுத்தத்தை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.