India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: வெஃகாமை
▶குறள் எண்: 180
▶குறள்: இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
▶பொருள்: விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
இன்று (பிப்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
இன்று (பிப்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
ஆந்திராவில் மகன் ஷ்யாம் பிரசாத்தை (35) தாய் லக்ஷ்மி தேவியே (57) கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காம வெறி பிடித்த ஷ்யாம் பிரசாத், தொடர்ந்து பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இறுதியில், தன்னுடைய அத்தையையே அவர் ரேப் செய்ய முயன்றதால் லக்ஷ்மி தேவி இத்தகைய முடிவை எடுத்ததாகத் தெரிய வந்துள்ளது. தாயையும் அவருக்கு உதவிய உறவினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
உலகிலேயே அதிக தூரத்திற்கு ரயில் சேவை இயக்கும் நாடு எது தெரியுமா? அமெரிக்கா தான். சுமார் 3 லட்சம் கிமீ தொலைவுக்கு அங்கு இருப்புப் பாதை பரந்து விரிந்திருக்கிறது. 2வது இடத்தில் உள்ள சீனாவில் 1.5 லட்சம் கிமீ தொலைவுக்கு இருப்புப் பாதை உள்ளது. 85 ஆயிரம் கிமீ தொலைவுடன் ரஷ்யா 3வது இடத்தை பிடித்திருக்கிறது. 4ம் இடம் இந்தியாவுக்கு தான். மொத்தம் 65,554 கி.மீ தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
48 வயதான பாலிவுட் நடிகர் சாஹில் கான் 22 வயது மிலெனா அலெக்ஸாண்ட்ராவை கரம் பிடித்துள்ளார். இருவரின் திருமணம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் பிரமாண்டமாக நடந்தது. ஐரோப்பாவை சேர்ந்த மிலெனா இப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஆனால் அதி புத்திசாலி என்கிறார் சாஹில். மற்றவர்களை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்தது போல வாழ்பவர்கள் எப்போதும் கிரேட் தான்!
விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு தேவைதான். தற்போது அவர் அரசியலில் இருப்பதால் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என குஷ்பு கூறினார்.
உறவுகள் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போகும் தலைமுறையில் இருந்து இவர்களை பார்க்கும்போது பொறாமையாக கூட இருக்கலாம். பிரேசிலை சேர்ந்த மனொயில் ஏஞ்சலிம் டினோ, மரியா டிசோசா தம்பதி 84 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 பிள்ளைகள், 55 பேரர்கள், 54 கொள்ளு பேரர்கள், 12 கொள்ளு கொள்ளு பேரர்கள். எப்படி ஒன்றாக இருக்க முடிகிறது என்கிற கேள்விக்கு அவர்களின் ஒரே பதில்: காதல்!
தலித் மக்கள் மீது தாக்குதல் நடப்பதை விசிக போன்ற இயக்கங்கள் வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று ஜெயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முதல்வரின் பதில் என்ன? புல்லட் ஓட்டியதால் அய்யாசாமி என்ற வாலிபரின் கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் திமுக கூட்டணியில் உள்ள விசிக போன்ற இயக்கங்கள் வேடிக்கை பார்ப்பதுதான் ஜனநாயகத்திற்காக பேராபத்து எனக் கூறியுள்ளார்.
நடிகை ரஷ்மிகா, கடந்த மாதம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது காலில் காயமடைந்தார். இதையடுத்து சூட்டிங்கில் பங்கேற்காத அவர், சிகிச்சைக்கும், திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் கால் நொண்டியபடி சென்று வந்தார். இந்நிலையில், கால் காயத்தில் இருந்து முழுவதும் குணமானதால், ஏஆர் முருகதாசின் சிக்கந்தர் பட சூட்டிங்கில் அவர் பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான படங்களை ரஷ்மிகா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.