India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீன வைரஸ் பரவுவதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியும்படி மக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தும்மல் மற்றும் இருமலின்போது வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும், கையை சுத்தப்படுத்த வேண்டும். கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், அவசிய உதவி ஏற்படின் சுகாதாரத் துறை உதவியை நாடலாம் என்று வலியுறுத்தியுள்ளது.
வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதிவு செய்யும் வசதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சனிக்கிழமைகளில் ₹1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்யும் வசதிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் வாய்ப்பு கொடுத்தால் பத்திரப்பதிவு சிரமம் இன்றி நடைபெறும் என்ற அடிப்படையில் அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
காலையில் காபி குடிக்காமல் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே பலருக்கு மனம் வராது. மனம் மயக்கும் சுவை, குறைந்த கலோரி, உடனடி ஆற்றல் போன்றவற்றிற்காக அதிகமானோர் பிளாக் காபியை விரும்பி குடிக்கின்றனர். இதில் உடலுக்கு புத்துணர்ச்சி, உடல் எடை குறைதல் போன்ற சில நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் முன்பதிவு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ‘இந்தியன் 3’ படத்தை ஷங்கர் முடித்துக் கொடுக்காமல் ‘கேம் சேஞ்சர்’ படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என திரைத்துறை கூட்டமைப்பில் லைகா புகார் அளித்திருந்தது. இந்நிலையில், கமல் இந்தியா திரும்பியதும் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து, பின்னர் நடிகராகவும், இயக்குநராகவும் கொடிக்கட்டி பறந்தவர் பாக்கியராஜ். திரைக்கதை மந்திரத்தால் ரசிகர்களை வசியம் செய்த இவர், தொட்டதெல்லாம் ஹிட்டு. காமெடி, சென்டிமென்ட், கிளாமர் என அனைத்து பரிமாணங்களையும் தொட்டு, தனித்துவமான படைப்புகள் மூலம் குடும்ப ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த திரைக்கதை மன்னனின் பிறந்தநாள் இன்று.
கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக இன்று போராட்டம் நடத்தவுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, கவர்னர் ஆர்.என் ரவி சபை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளியேறினார். இந்நிலையில், பாஜக அல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள திமுக, மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீட்டை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதன் தூய்மை தன்மையை உறுதி செய்வது அவசியமாகிறது. அதன்படி, வெள்ளிக்கும் ஹால்மார்க் கொண்டு வர வேண்டும் என்று நுகர்வோர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
*1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயில் அழிந்தது *1782 – USAஇன் முதல் வர்த்தக வங்கியான வட அமெரிக்க வங்கி திறப்பு *1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதல் தொலைபேசி செய்தி நியூயார்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையே அனுப்பப்பட்டது. 1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய அரசை USA அங்கீகரித்தது *1953 – இயக்குநர் பாக்கியராஜ் பிறந்தார் *1980 – இந்தியாவின் ஆட்சி மீண்டும் இந்திரா காந்தி கைவசம் வந்தது
‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள சிவாஜி புரொடெக்ஷன் தயாரிப்பு நிறுவனம் NOC கொடுத்துள்ளதாக நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்காக நயன்தாராவிடம் ₹5 கோடி நஷ்டஈடு கேட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், உரிய அனுமதி பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கனடாவில் நிலவும் பணவீக்கம், வீட்டுவசதி பிரச்னை, அதிகரிக்கும் அரசின் கடன், சுகாதார சீர்கேடு என ட்ரூடோ மீது அதிருப்தி இருந்த நிலையில், சீக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, இந்தியாவை பகைத்துக் கொண்டது அவரது செல்வாக்கை குறைத்துவிட்டது. அதிக வரிவிதிப்பேன் என்ற டிரம்பின் மிரட்டலும் ட்ரூடோவை நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது.
Sorry, no posts matched your criteria.