India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 2 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிக்கிறார். பிப்ரவரி 3வது வாரத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி தேர்தலுடன் சேர்த்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பறவைக் காய்ச்சல் என்று சொல்லப்படும் H5N1 நோய்த் தொற்றுக்கு அமெரிக்காவில் ஒருவர் பலியாகியிருக்கிறார். அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலுக்கு பலியாகும் முதல் நபர் இவர்தான். உலகம் முழுவதும் HMPV வைரஸ் அச்சம் பரவிவரும் நிலையில் பறவைக் காய்ச்சல் பலி கவனம் ஈர்த்திருக்கிறது. H5N1 வைரசிலேயே இது புதிய வகை என்பதால் தாக்கம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2019இல் <<15053599>>₹11.45 கோடி<<>> பறிமுதல் வழக்கில் DMK எம்பி கதிர் ஆனந்த் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன், வங்கி அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நிறைவடைந்தது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் கதிர் ஆனந்த் ஆஜராகாததால் தான் அண்மையில் அவர் வீட்டில் சோதனை நடந்துள்ளது. இதனிடையே, கைது செய்யத் தடை விதிக்கக்கோரி கதிர் ஆனந்த் தரப்பு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.
HMPV வைரஸ் நாட்டில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாக, பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமாக பிறருக்கு பரவுகிறது. அதிகமாக எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களையே இது தாக்குகிறது. உடலில் நுழைந்த 3-6 நாள்கள் கழித்தே அறிகுறிகள் (சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்) தெரிகிறது.
சட்டப்பேரவையில் இன்று மறைந்த Ex PM மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. பின்னர், அவை ஒத்திவைக்கப்பட்டு நாளை(ஜன.8) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் நடைபெறும். 11ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது CM ஸ்டாலின் பதிலுரை ஆற்றுகிறார்.
TNன் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில், மாநிலத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், புதிதாக 8.82 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு விரைவில் தபால் மூலம் VOTER ID கார்டு வழங்கப்படும். இறுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை <
HMPV வைரஸ் தொற்று 2001 ஆண்டு முதலே இருந்தாலும் அதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன்! உரிய சிகிச்சை கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சையாக ஆக்ஸிஜன் தெரப்பி, IV fluid, ஸ்டீராய்ட் போன்றவை செலுத்தப்படுகின்றன. எனவே, மாஸ்க் போன்றவற்றை அணிந்து தற்காத்துக் கொள்வதே சிறந்தது.
குஜராத் மாநிலம் கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் அப்பெண்ணை மீட்க போராடி வருகின்றனர். தற்போது அவருக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜஸ்தானில் 700அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 9 நாட்கள் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டும், உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
CIBIL ஸ்கோரை பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் பார்க்கலாம். சிபில் இணையதளத்தில் ‘Personal CIBIL Score’ஐ தேர்வு செய்யவும். ‘Get your free CIBIL score’ஐ கிளிக் செய்யவும். சிபில் இணையதளத்தில் கணக்கு இல்லை என்றால் பாஸ்போர்ட், Voter ID ஏதேனும் ஒன்றை கொடுத்து அக்கவுண்டை ஆரம்பிக்கலாம். மற்ற விவரங்களை நிரப்பி Submit செய்தால் கணக்கு உருவாகிவிடும். பின்னர் சிபில் இணையதளத்தில் ஸ்கோரை செக் செய்யலாம். SHARE IT.
இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி சிவகங்கை அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் உடல்நலம் சரிவராததால் மதுரையில் உள்ள ஹாஸ்பிட்டலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.