India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
உலகின் 6ஆவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்வதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில் ‘பாரத் டெக்ஸ் 2025’ கண்காட்சியில் பேசிய அவர், கடந்தாண்டில் மட்டும், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 7% வளர்ச்சி கண்டுள்ளது என்றார். தற்போது ₹3 லட்சம் கோடியை எட்டியுள்ள ஜவுளி ஏற்றுமதியை, 2030க்குள் ₹9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 181
▶குறள்: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
▶பொருள்: அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி., அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. வதோதராவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த UPWW அணி, 20 ஓவர்களில் 143/9 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய GGW அணி, 18 ஓவர்களில் 144/4 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்று 7.30 PMக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது.
இன்று (பிப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
இன்று (பிப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
தேசிய விருது குறித்து நடிகை சாய்பல்லவி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். எனக்கு தேசிய விருது கிடைத்தால், அந்த நிகழ்ச்சியில் எனது பாட்டி எனக்கு சிறுவயதில் பரிசாக கொடுத்த சேலையைதான் அணிந்திருப்பேன். அந்த ஒரு காரணத்துக்காகவே தேசிய விருதுக்காக காத்திருக்கிறேன் என சாய் பல்லவி கூறினார். ‘கார்கி’ படத்திற்காக சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையை கேள்வி கேட்கும் தவெக தலைவர் விஜய்யின் மகன் எங்கு படித்தார் என்று பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அவரது மகன் சமச்சீர் பள்ளியில் படித்தாரா அல்லது இருமொழிக் கொள்கை கொண்ட பள்ளியில் படித்தாரா என்று கேட்டிருக்கும் H.ராஜா, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளை மட்டும் வேறு மொழி படிக்காதே விஜய் அவர் தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
உருவம், அறுவடை நாள் படங்களை ‘இயக்கியவர் ஜி.எம். குமார். விஷாலின் ‘அவன் இவன் படத்தில் ஜமீன்தார் கேரக்டரில் இவர் கலக்கியிருப்பார். இந்நிலையில், தனது பெர்சனல் வாழ்க்கை குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவர் பேசியுள்ளார். திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு பெண்ணுடன் 25 வருடங்களாக LIVE IN RELATIONSHIP-இல் இருந்தேன். ஆனால், அது கடைசி வரை நிலைக்கவில்லை. அதற்கு காரணம் சளிப்புதான் என அவர் கூறினார்.
மும்மொழிக் கொள்கையுடன் NEPஐ ஏற்றால் தான், TNக்கு நிதி என மத்திய அரசு கூறிய நிலையில், அண்ணாவின் பேச்சை பலரும் SM-இல் பகிர்கிறார்கள். ”சீனா படையெடுத்தபோது ஹிந்தியில் பேசியா நாம் ஒன்றுபட்டோம்? 3 மாதங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் தான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. ஆனால், 30 ஆண்டுகளாக தமிழ் படித்தும் ஒருசில இடங்களில் பொருள் விளங்கவில்லை என அறிஞர்களே கூறுகிறார்கள்’’ என்பது அண்ணாவின் கருத்து.
Sorry, no posts matched your criteria.