India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

USA-ல் போதைப்பொருள்கள் ஊடுருவுவதற்கு வெனிசுலாவை டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் ஓரிரு நாள்களில் வெனிசுலா மீது ராணுவ தாக்குதல்களை நடத்தும்பொருட்டு, அந்நாட்டு கடல் பகுதிக்கு அருகே USA, தனது படைகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ‘No’ என்று ஒரே சொல்லில் டிரம்ப் மறுத்துள்ளார். கடந்த செப்டம்பரில் கரீபியன் கடலில், போதைப்பொருள் கப்பல் மீது USA தாக்குதல் நடத்தியது.

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

*புதிய தயாரிப்பு நிறுவனத்தை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தொடங்கியுள்ளார். *’மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை இன்று வெளியாகிறது. *சல்மான் கானின் அடுத்த படத்தை வாரிசு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளார். *’கிஸ்’ படம் நவ.7-ம் தேதி ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

TN-ல் பிஹார் தொழிலாளர்களை துன்புறுத்துவதாக PM பேசியதற்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் சிறந்த மாநிலமாக இருந்தால் அங்கிருப்பவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுக்கலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் BJP வெற்றி பெறும் எண்ணத்தில், அங்குள்ளவர்களை உசுப்பேற்றும் விதமாக PM மோடி பேசுவதை, பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

16-ம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய கால ஓவியர் பசவன் தீட்டிய ஓவியம், தற்போது ₹120 கோடிக்கு ($13.6 மில்லியன்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. மலையின் மீது மரங்களின் கீழ் சிவிங்கிப் புலிகள் குடும்பமாக ஓய்வெடுக்கும் காட்சி இதில் அற்புதமாக தீட்டப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்டி ஏல நிறுவனம் தான் இதை விற்பனை செய்துள்ளது. கலையின் மதிப்பு என்றும் குறையாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

இந்திய T20 அணியின் மிகவும் ராசிக்காரராக பார்க்கப்பட்டவர் ஷிவம் துபே. அவர் அணியில் இருந்த கடந்த 37 போட்டிகளில் இந்திய அணி தோல்வியே அடைந்ததில்லை என்பதே அதற்கு காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், அவரது அதிர்ஷ்டம் இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக நெட்டிசன்கள் SM-ல் பதிவிட்டு வருகின்றனர். அடுத்த போட்டியில் இந்தியா வென்று, இந்த கணக்கை முதலில் இருந்து தொடங்குமா?

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கிய EPS-ற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது என்றும் இதுபோன்ற மனப்பாங்கு திருத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை திமுகவுக்கு மறைமுக உதவி செய்பவர்களாகவே கருதமுடியும் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.