India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும்
*மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும்
*நாள்தோறும் 2 துளசி இலையை சாப்பிட்டால் சிறுநீரக கற்களால் ஏற்படும் அசெளகரியத்தை குறைக்கும்,
*பிரியாணி (பே லிஃப்ஸ்) இலைகள், ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
*சிவரி கீரை, சிறுநீரகத்தில் உருவாகும் கால்சியம் படிகங்களை உடைக்க உதவுகிறது.
“வெள்ளைக் குடை வேந்தர்” என CM ஸ்டாலினுக்கு பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். வேலூர் கூட்டத்தில் பேசிய அவர், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது GoBackModi என கருப்பு பலூன் இருந்தது. ஆளும் கட்சியானதும் ஊழல் குற்றச்சாட்டுகளால், WelcomeModi என்று வெள்ளைக் குடை வந்துவிட்டது என்றார். மேலும், நீட் ரத்து ரகசியத்தை உதயநிதியால் இதுவரை கண்டறிய முடியவில்லை எனவும் சாடினார்.
சட்ட ரீதியில் தான், விகடன் இணையதளம் முடக்கப்பட்டது என மத்திய இணை அமைச்சர் L.முருகன் தெரிவித்துள்ளார். மேலும் இணையதளம் முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் USAவுக்கு PM மோடி சென்றிருந்த நிலையில், விகடன் மேகஸின் அதனை விமர்சித்து கார்டூன் வெளியிட்டிருந்தது. இது சர்ச்சையானதால் விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியது.
*வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை அரைத்து காய வைத்தபிறகு, தேங்காய் எண்ணெய்யில் அதை ஊற வைத்து தலை முடியில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
*1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யில், சிறிதளவு தேயிலையைப் போட்டு தைலப்பதத்தில் காய்ச்சி தடவி வந்தால் முடி கருமையாகும்.
*கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தை அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து தடவ நரை முடி மறையும்.
தமிழகத்தில் மீண்டும் மொழிப்போரை உருவாக்கிட வேண்டாம் என மத்திய அரசுக்கு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி, ஏமாற்று வேலை எனக் குறிப்பிட்ட அவர், தாய்மொழிக் கொள்கை தான் உலகின் தலைசிறந்த கொள்கை என்றார். மேலும், ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே உணவு என்பதை தமிழ்த் தேசியம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் தலைமை அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்ய வேண்டும் என தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எதிர்பார்ப்பது நியாயமானது தான் எனக் குறிப்பிட்ட SC, சீனியர்கள் அதிகாரிகளின் அறிவுரை, பணியிடத்தில் ஒழுக்கம், கடமையை செய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது என விளக்கமளித்துள்ளது.
*என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
*வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
*எல்லாவற்றுக்கும் காரணங்கள் இருக்கின்றது; ஆனால் நியாயமானதாக இருப்பதில்லை.
*நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது, நீங்களும் மாற வேண்டும்.
*அது அவன் பணம் தான். ஆனால், அதனை அவனால் உண்ண முடியாது.
கிரிக்கெட் விளையாடினால் பணம் வருமென நினைக்காமல், மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்க வேண்டும் என இந்திய அணி Ex வீரர் அஸ்வின் கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கிரிக்கெட் என்பது வரவு-செலவு கணக்கு பார்க்கும் இடமில்லை. அப்படி யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்” என்றார். மேலும், கிரிக்கெட்டில் யாரும் அரசியல் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘ஆண் பாவம் பொல்லாதது’ என தலைப்பிடப்பட்டுள்ளது. VJவாக இருந்த ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ‘ஜோ’ திரைப்படம் அவருக்கு சினிமா துறையில் அவருக்கான இடத்தைத் தேடித் தந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் APP படத்தில் நடித்துள்ளார். இந்தக்கால இளசுகளை கவரும் வகையில், காதல் திரைக்கதை பின்னணியில் படம் உருவாகியுள்ளது.
▶பிப்ரவரி 17 ▶மாசி 5 ▶கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM, 04.30 PM – 5.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:30 PM – 10:30 PM, 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: சித்திரை ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.
Sorry, no posts matched your criteria.