India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 10 முதல் 17 வரை வேட்புமனுத் தாக்கல், ஜனவரி 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என ECI அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.EVKS இளங்கோவன் மறைவால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
TNல் நடக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். DMK ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில் போஸ்டர் ஒட்ட DMKக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும் கடிந்துள்ளார். எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி வழங்காத காவல்துறை, DMK போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்குவதாகவும் சாடியுள்ளார்.
இந்தியா விரைவில் 100 கோடி வாக்காளர்களை எட்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், EVM மெஷின் மீது பலரும் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. ஆனால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனால், காலாவதியான வாக்குச்சீட்டு முறை தேவையற்றது எனக் கூறினார்.
பொங்கல் பண்டிகைக்கு ஜன.11 – 19ஆம் தேதி வரை (ஜன.13 தவிர) 8 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜன.10, 11, 12, 13இல் ஆம்னி பேருந்துகளில் சென்னை – குமரிக்கு ₹1,050லிருந்து ₹3,899ஆகவும், நெல்லைக்கு ₹799லிருந்து ₹2,000ஆகவும், மதுரைக்கு ₹640லிருந்து ₹1,700ஆகவும், கோவைக்கு ₹849லிருந்து ₹2,470ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான காமராஜர் விருது தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரது 50 ஆண்டுகால பொதுவாழ்வு சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதோடு, விருதுத்தொகையாக ₹2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஜன.15ல் சென்னையில் நடைபெறும் விழாவில் CM ஸ்டாலின் அவருக்கு இந்த விருதினை வழங்க உள்ளார்.
ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் உட்பட மாநிலம் முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை (IT) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரபல கன்ஸ்ட்ரக்சன், மெட்டல் நிறுனவனத்திற்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பன்களுக்கு நடுவே இறைச்சி வைத்து சமைக்கப்படும் Hot Dogs உணவுக்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமல்ல, உணவுக்கும் எதிரானவர் அதிபர் கிம் ஜாங் உன். தடையை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாம். Flakes, Kimchi உள்ளிட்ட பல மேற்கத்திய, தென்கொரிய உணவுகளுக்கு அங்கு ஏற்கெனவே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய தாக்கத்தை தடுக்கவே இந்த நடவடிக்கையாம்.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவை மாநில ஆளுநரே தேர்வு செய்வார் என்ற UGCயில் திருத்தத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு அனைத்து உரிமைகளையும் தன்வசம் எடுத்துக் கொள்ள நினைப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அவர் இதனை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தை மாதத்தில் தவெகவின் தொழிற்சங்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பணிகளை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தவெக செய்து வருவதாகவும், தொழிலாளர் பிரச்னைகள் தொடர்பாக குரல் கொடுக்க இந்த சங்கம் அமைக்கப்படுவதாகவும் தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். தை மாதம் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளதாகவும், அதனுடன் தொழிற்சங்கம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்கின்றனர்.
சத்துணவு பணியாளர்களின் கூடுதல் பொறுப்பு படியை ₹600ல் இருந்து ₹1000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சத்துணவு பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து வரும் விலைவாசி காரணமாகவும், அவர்களுக்கு நாளென்று ₹20 வீதம் மாதத்திற்கு ₹600 ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படி, ஒரு நாளுக்கு ₹33 வீதம், மாதத்திற்கு ₹1000ஆக உயர்த்துவதாக கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.