India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸை ரேப் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து சத்தியபாலு என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிளாட்பார்மில் நடந்து சென்ற பெண் போலீஸை கீழ் தள்ளிவிட்டு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என கனிமொழி எச்சரித்துள்ளார். GST வழியாக எல்லா வரிகளையும் வசூலித்துவிட்டு, எந்த நிதியும் தர மறுப்பதாக மத்திய அரசை குற்றஞ்சாட்டிய அவர், TN மக்களின் போர்க்குணம் குறையவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார். கல்வியை பொதுப்பட்டியலில் வைத்துக்கொண்டு, தனது கொள்கைகளை மத்திய அரசு மாநிலங்களின் மீது தொடர்ந்து திணிப்பதாகவும் சாடினார்.
GPayல் விரைவில் AI அம்சம் அறிமுகமாக உள்ளது. இதனையடுத்து பயனர்கள் வாய்ஸ் கமெண்ட் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். கூகுள் நிறுவனம் தற்போது இதற்கான பரிசோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், விரைவில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் படிக்காதவர்களும் எளிதாக பரிவர்த்தனை செய்ய முடியும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதில் அனைத்து இந்திய மொழிகளையும் சேர்க்க கூகுள் முயற்சித்து வருகிறது.
காபி குடிக்காமல், 6 மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து வேலை பார்த்தால், உயிர் இழப்பதற்கான வாய்ப்புகள் 60% வரை உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காபி குடிப்பவர்கள் உடலில் வளர்சிதை பாதிப்புகள் குறைவாக காணப்படுவதாக பயோமெட் சென்ட்ரல் (BMC) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அபத்தமாகத் தெரிந்தாலும், இது உண்மை என அடித்துக்கூறுகிறார்கள். இனி கொஞ்சம் காபியும் குடியுங்கள்! SHARE IT.
TNல் புதிய கல்விக் கொள்கையை ஏற்பதில் என்ன பிரச்னை என இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆரம்பக் கல்வியில் தாய்மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று கூறிய அவர், கல்வியாளர்கள், வல்லுநர்களின் ஆலோசனைப்படியே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக்கொள்கை மிகவும் அவசியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரத் தொடக்க நாளான இன்று காலை இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 489 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 75,450ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 118 புள்ளிகள் சரிந்து 22,811ஆக வர்த்தகம் ஆகிறது. டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது உள்ளிட்டவையே சரிவிற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பாப் பாடகியும், நடிகையுமான ஷகீரா ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 48 வயதாகும் அவருக்கு திடீரென அடி வயிற்றில் வலி ஏற்பட்டதாகவும், இதையடுத்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெருவில் நடைபெறவிருந்த அவரது நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ரசிகர்களிடம் தெரியப்படுத்தி, ஷகீரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
டெல்லியை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவான இந்நிலநடுக்கம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த பதற்றத்திற்கு மத்தியில், பீகாரிலும் காலை 8 மணியளவில் நிலநடுக்கம் நேரிட்டது. இது, ரிக்டர் அளவில் 4ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலேய எழுத்துகளுக்கு நிகராக தமிழில் சொற்கள் இருப்பது போலவே, மற்ற மொழிகளிலும் சொற்கள் இருக்கின்றன. அப்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை ஜப்பான் மொழியை சேர்ந்த katakana சொற்கள். இதில், spell பண்ணி உங்கள் பெயர், உங்களுக்கு தெரிஞ்சவங்க பெயரை கமெண்ட் பண்ணுங்க. எது செம காமெடியாக இருக்கிறது என பார்ப்போம். SHARE IT. அண்ட் இது விளையாட்டிற்காகவே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கில் கிடையாது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (AICTE) தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த யாசஸ்வி திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதன்கீழ் பொறியியலில் மெக்கானிக், சிவில் போன்ற அடிப்படை பாடப்பிரிவுகளில் சேரும் தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50,000 உதவித்தாெகை செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பிக்காதோர் www.scholarships.gov.inஇல் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.