India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரீசார்ஜ் செய்யத் தேவையின்றி 5,700 ஆண்டுகள் இயங்கும் பேட்டரியை ப்ரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் 14 என்ற மூலக்கூறில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சில் இருந்து இந்த பேட்டரி தயாரிக்கப்படுகிறது. மனிதர்கள் கதிர்வீச்சால் பாதிக்காமல் இருக்க, அதனைச்சுற்றி வைரம் பதிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த பேட்டரி குறித்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது.
நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சில நேரங்களில் வேலை செய்யாது. இதற்கான காரணத்தை இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் இணையதளத்தில் அறியலாம். அதாவது, <
சர்வதேச சதி கும்பலுடன் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாயின் மனைவிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதால், அவர் மீதும் சந்தேகம் எழுந்தது. இதனால் கடந்தவாரம் வரை அவரை, அசாம் CM ஹிமந்த சர்மா கடுமையாக விமர்சித்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டிருக்கிறார் சர்மா. வேண்டுமென்றே யாரோ சிலர் அவரை சிக்க வைத்திருப்பதாகவும், ஏன் பிளாக்மெயில் கூட செய்திருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்.
பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா வங்கியின் கிளைகளில் 172 மேனேஜர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பப்பதிவு <
பங்குச்சந்தைகள் 20 சதவீதத்துக்கு மேல் இறங்கும்போது அதனை கரடிச்சந்தை என்று அழைக்கின்றனர். அந்த வகையில், Nifty Midcap 100 & Nifty Smallcap 100 ஆகிய indexகள் உச்சத்தில் இருந்து 20 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளன. இது, இந்திய சந்தைகள் படிப்படியாக கரடிச்சந்தைக்குள் நுழைவதை காட்டுகிறது. Nifty 50 இதுவரை 12% சரிந்திருக்கிறது. இது 20 சதவீதத்தை தொடும்போது இந்தியச்சந்தை Bear Marketஆக மாறும்.
PM SHRI திட்டத்தை செயல்படுத்த MoU போட தயார் என திமுக அரசு கடிதம் எழுதியது ஏன்? என அதிமுக வினவியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். PM SHRI திட்டத்தை ஏற்பதாக கடிதம் எழுதிவிட்டு இந்தித் திணிப்பை எதிர்க்கும் லட்சணமா இது? என்றும் சாடியுள்ளார்.
BCCI விதித்த கண்டிஷனால், கோலி சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு குடும்பம், தனிப்பட்ட ஊழியர்களை அழைத்து வரக்கூடாது என BCCI நிபந்தனை விதித்துள்ளது. இதனால், கோலி அவரின் சமையல்காரரை அழைத்துச் செல்லவில்லை. Diet விஷயத்தில் Strictஆக இருக்கும் அவர், தற்போது வேறு வழியில்லாமல், மேனேஜரை வைத்து ஓட்டலில் இருந்து பிரத்யேகமாக உணவை வரவழைத்து சாப்பிடுகிறாராம்.
வெயில் காலத்தில் மாநிலத்தின் மின்சாரத் தேவை 22,000 MW ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, 8,525 MW மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை TANGEDCO தொடங்கவுள்ளது. இதன்மூலம், வீடுகளுக்கு கோடையில் மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். தமிழ், ஆங்கிலத்துடன் பிற மொழிகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பிய அவர், மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், மாணவர்கள் மத்தியில் போட்டியை உருவாக்க, தேசிய அளவில் சமமான கல்விக்கொள்கை அவசியம் என்றார்.
Sorry, no posts matched your criteria.