India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் பள்ளிகளைக் கட்ட ₹2,000 கோடி வழங்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதற்காக GEMS எனும் சர்வதேச நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 20 பள்ளிகள் கட்டப்படும் எனவும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ₹10,000 கோடியில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அதானி அறிவித்திருந்தார்.
டிஜிட்டல் யுகத்தில் உலகின் எந்த மூலையில் இருந்தும் பணியாற்ற முடியும். அதிலும் அதிவேக இன்டர்நெட், இயற்கை சூழல், living cost என பல்வேறு அம்சங்களுடன் பணியாற்றவே டிஜிட்டல் நாடோடிகள் விரும்புகின்றனர். அப்படி அவர்கள் அதிகம் விரும்பும் இடம் எது தெரியுமா? இத்தாலியின் GENOA.124 டாலருக்கு ஓராண்டு விசாவுடன் அதிவேக இன்டர்நெட் வசதியும் கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களும் இங்கு அதிகம்.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் இன்று தொடங்கி, தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை வணிக வரித்துறை, 20ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. நீட்-க்கு விண்ணப்பிக்கும் போது அடிக்கடி ‘Error’ ஏற்படுவதால் ஆசிரியர்களே தடுமாறுவதாகவும், இதனால் மாணவ – மாணவிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் தகவல் வெளியானது. இதனால், பயிற்சி எடுத்த பிறகு நீட் தேர்வுக்கு விருப்பமுள்ள மாணவர்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
புளிச்சக்கீரை – வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
முளைக்கீரை – பசியை தூண்டி கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதிப்பை தடுக்கும்.
மரவள்ளிக் கிழங்கு – இதயத்துடிப்பை சீராக்கும்.
கருணை கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
சேப்பக்கிழங்கு – உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
2024ஆம் ஆண்டுக்கான BBCயின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது, மனு பாக்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் இருந்த நிலையில், அவர் தேர்வாகியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் ஏப்ரல் 1 முதல், குறைந்த போதை தரும் மதுபானக் கூடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. அதேபோல, உஜ்ஜயின், மஹேஷ்வர் போன்ற 17 புனித தலங்கள் உள்பட 19 நகரங்களில் உள்ள 47 மதுக்கடைகள், ஏப்.1 முதல் மூடப்படுகின்றன. புதிய மதுபானக் கூடங்களில் 10%க்கும் கீழ் உள்ள பீர், ஒயின் ஆகிய மதுபானங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. TNஇல் இந்த நடைமுறையை செயல்படுத்தலாமா? மதுக்கடையை முழுவதுமாக மூடனுமா? CMT Here.
*குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோய் சரியாகும்.
*கொட்டிக்கிழங்கு தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக பூசினால் சீக்கிரம் ஆறிவிடும்.
*உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் கொட்டிக்கிழங்குக்கு உண்டு.
*கொட்டிக்கிழங்கை துண்டாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து பருகலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.
Ex அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியின்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 33 பேரிடம் ₹3 கோடி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிடுமாறு, ஐகோர்ட்டில் தொடர்ந்த மனு கடந்த மாதம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸுக்கு, ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், போப்புக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூச்சுத் திணறலால் கடந்த 14ஆம் தேதி போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.