news

News February 18, 2025

மரணத்திலும் பலருக்கு வாழ்வு கொடுத்த அந்த தாய்!

image

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற பெண், அக்குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த துயரம் டெல்லியில் நடந்துள்ளது. கர்ப்பிணியான அஷிதா (38) கடந்த 7ஆம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து, சிசேரியன் மூலம் பெண் குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால், கடந்த 13ஆம் தேதி அஷிதா மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தார் தானம் செய்தனர்.

News February 18, 2025

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை இன்று முதல் <>புக்கிங்<<>> செய்யலாம். மேலும், சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனா சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 21ஆம் தேதியும், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், வரும் 24 ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.

News February 18, 2025

தேர்தல் பணிகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு கல்தா!

image

அதிமுகவில் 2026 சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலரது பெயர்கள் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களின் பட்டியலில் Ex அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், SP வேலுமணி, சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் பெயர்கள் இடம்பெறவில்லை. இது முக்கியமான பொறுப்பு என்பதால் ஏன் வழங்கப்படவில்லை என அவர்களது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.

News February 18, 2025

பிரம்மாண்ட இயக்குனருடன் இணையும் SK…

image

பராசக்தி, மதராஸி என 2 பெரிய Expectation உடைய படங்களில் SK பிஸியாக நடித்து வருகிறார். அடுத்த அவர் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். அப்படத்தை பெரிய இயக்குனர் ஒருவர் தான் இயக்கப்போகிறார் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த இயக்குனர் யார் என அவர் சொல்லவில்லை. யாருடைய டைரக்‌ஷனில் SK அடுத்து நடிச்சா நல்லா இருக்கும்..நீங்க சொல்லுங்க?

News February 18, 2025

₹4,340 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

image

2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில், ₹4,340.47 கோடி என்ற அளவில் பாஜக அதிக வருவாய் ஈட்டியதாக தேர்தல் உரிமைகள் அமைப்பின் (ADR) அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் ₹2,211.69 கோடி மட்டுமே அக்கட்சி செலவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ₹1,225.12 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், அதில் ₹1,025.25 கோடியை செலவு செய்துள்ளது. கட்சிகளின் இந்த வருவாய், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டது.

News February 18, 2025

பாமாயில், பருப்பு விலை கிடுகிடு உயர்வு

image

பாமாயில், உளுந்தம் பருப்பின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் பாமாயில் 15 கிலோ ₹2,130க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ₹2,180க்கு விற்பனையாகிறது. அதேபோல், உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ₹11,200க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ₹11,500க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் சிகப்பு மசூர் பருப்பும், பாசிப் பருப்பும் மூட்டைக்கு தலா ₹200 வரை குறைந்துள்ளது.

News February 18, 2025

‘ஜெயிலர் 2’ படத்தின் வில்லன் யார்?

image

‘ஜெயிலர் 2’ படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா அல்லது மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News February 18, 2025

புதிய தலைமைத் தேர்தல் ஆணையரின் பின்னணி என்ன?

image

புதிய ECI ஞானேஷ்குமார் ஆக்ராவில் பிறந்தவர். கேரளா மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் அமைய முக்கிய கருவியாக இருந்தார். 2019ல் காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கப்பட்டபோது மத்திய உள்துறையில் J&K பொறுப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

News February 18, 2025

செல்போனால் அண்ணன், தங்கை எடுத்த விபரீத முடிவு

image

புதுக்கோட்டையில் செல்போன் பயன்படுத்துவதை குறைக்குமாறு அண்ணன் அட்வைஸ் செய்ததால் கிணற்றில் குதித்த +1 மாணவியும், அவரை காப்பாற்ற குதித்த அண்ணனும் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியாகியும் சிறுமி செல்போன் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அண்ணன் மணிகண்டன் செல்போனை தரையில் வீசியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதில் யாரைக் குற்றம் சொல்வது?

News February 18, 2025

போக்சோ வழக்கில் தண்டனை பெற்றால் சான்றிதழ் ரத்து

image

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என TN CS முருகானந்தம் அறிவித்துள்ளார். மேலும் இனிமேல் ஆசிரியர்கள் நியமனத்தின்போது, போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சமீப நாட்களாக TN பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ள சூழலில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!