India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. அதேபோல், சீன வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என நேற்று முன்தினம் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும், மாஸ்க் அணிய வலியுறுத்தி உள்ளார். நீங்கள் மாஸ்க் அணிகிறீர்களா? இல்லையா? கீழே பதிவிடுங்க.
தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 518 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிட்டர், ஆபரேட்டர், டெக்னீஷியன், செவிலியர், மருந்தாளர் உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமுள்ளோர் ஜன. 21-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-35. சம்பளம்: ₹29,500 – ₹1,15,000. கல்வித்தகுதி: B.Sc., ITI, Diploma. கூடுதல் தகவல்களுக்கு https://nalcoindia.com/ சென்று பார்க்கவும்.
இஸ்ரோவின் புதிய சேர்மனாக V.நாராயணன் வரும் 14ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். குமரியைச் சேர்ந்த சிவன், ஏற்கனவே ISRO தலைவராக இருந்த நிலையில், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து இஸ்ரோவுக்கு தலைவராகும் நாராயணனும் குமரியைச் சேர்ந்தவர். ராக்கெட், விண்கல உந்துவிசை செயல்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற இவர் தலைமையிலான குழு 183 திரவ உந்துவிசை திட்டம், கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை அரசு செலுத்தி வருகிறது. இந்த மாதம் பொங்கலையொட்டி 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி அரசு விடுமுறையாகும். இதுமட்டுமன்றி 11ஆம் தேதி 2ஆவது சனிக்கிழமை. 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இடையில் 13ஆம் தேதி மட்டுமே உள்ளது. ஆதலால் 10ஆம் தேதியே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க வருகிற 11ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. அதுபோல ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் வரும் மோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கு; * ஸ்பாம் எண்களை சிவப்பு நிறத்தில் காட்டி எச்சரிக்கும் TrueCallerஐ உபயோகிக்கலாம் * தொடர்ந்து அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை பிளாக் செய்யுங்கள் * அது குறித்து 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்கவும் * வாட்ஸ்அப் வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க “Silent Unknown Calls” என்ற அம்சத்தை பயன்படுத்தலாம்.
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பள்ளி மாணவர்களை மேம்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்த ஆசிரியர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் 23,000 தன்னார்வலர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக, தற்போதுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கவும், அவர்களுக்கு மாதம் ₹12,000 மதிப்பூதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சில நாள்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 1,036 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் பிப்.,6 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Degree. வயது வரம்பு: 18-48. சம்பளம்: ₹35,400-₹47,600. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு https://www.rrbchennai.gov.in/ சென்று பார்க்கவும்.
➞ எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் உபாதைகள் வெளியேற்ற உதவும் ➞ காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி, தியானம் அன்றைய தினம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைக்க உதவும் ➞ எந்த காரணத்தினாலும் காலை உணவைத் தவற விடக்கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை அதிகரிக்கும். ட்ரை பண்ணுங்க…SHARE IT.
Sorry, no posts matched your criteria.