India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதே போப் பிரான்சிஸின் கடைசி வார்த்தை. நேற்று ஈஸ்டர் தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து ஆசி வழங்கிய அவர், இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் கூட கூறியுள்ளார். இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி வந்திறங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து வழிபட்டார். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ராஜஸ்தானில் உள்ள பிரசித்தி பெற்ற அரண்மனை ஆகியவற்றையும் கண்டுகளிக்க ஜேடி வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது மனைவி உஷா ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936-ல் பிறந்த <<16168574>>போப் பிரான்சிஸ்<<>> கடந்த 2013-ல் கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக பொறுப்பேற்றார். 12 ஆண்டுகள் அந்த பொறுப்பிலிருந்த 65 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். நேற்று ஈஸ்டர் தினத்தையொட்டி அமெரிக்க துணை அதிபர் J.D.வான்ஸ் உள்ளிட்டோருக்கு ஆசி வழங்கிய நிலையில், இன்று உலகை விட்டு மறைந்தார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 3,500 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். பேரவையில் போக்குவரத்துத் துறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, 15 ஆண்டுகள் பழமையான பஸ்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
மின்சார சிக்கனம்; தேவை இக்கணம் என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது அது AI மாடல்களிடம் உரையாற்றுவதற்கும் தேவைப்படுகிறதாம். Thank you, hello, please போன்ற சிறிய உரையாடல்களுக்கு கூட மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாகக் கூறி OPEN AI சிஇஓ சாம் அல்ட்மென் அதிர்ச்சியளித்துள்ளார். எனவே, தேவையானதை மட்டும் AI–யிடம் கேளுங்கள். ப்ளீஸ்…
தமிழகத்தை தொடர்ந்து பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிப்பதாக சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், 3வது மொழியாக இந்தியை கற்பிப்பது மாணவர்களுக்கு சுமையாக அமையும் என மாநில மொழிக் குழுவும் தெரிவித்துள்ளது. ஆனால், மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிக்கவில்லை என CM பட்நாவிஸ் விளக்கமளித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், வாடிகனில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.
அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ₹500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது. உஷாரா இருங்க மக்களே!
கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படும். வேறு எந்த தமிழக வீரரை ஒப்பந்தத்தில் சேர்ந்திருக்கலாம்னு நீங்க சொல்லுங்க…
Sorry, no posts matched your criteria.