India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பயிற்சியின்போது, காயமடைந்த பண்ட் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. மைதானத்தில் இருந்து அவர் தத்தி, தத்தி வெளியேறிய நிலையில், 20-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. அவருக்கு பதிலாக, அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் சேர்க்கப்படலாம் எனப்படுகிறது. ஆனால், இதில் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
நாடு முழுவதும் சர்க்கரை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சர்க்கரை உற்பத்தி குறைந்ததால் 77 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 12% விலை உயர்ந்துள்ளதாகவும் வணிகர்கள் கூறியுள்ளனர் ₹31க்கு விற்கப்பட்ட சர்க்கரை தற்போது ₹39ஆக உயர்ந்துள்ளது. மக்களின் தினசரி பயன்பாட்டில் டீ, காபி உள்ளிட்டவற்றுடன் சர்க்கரை முக்கிய பங்கு வகிப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியர்களை பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. 13 பிரிவுகளில் மும்பை மற்றும் டெல்லியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மோடி- மஸ்க் சந்திப்பிற்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக சுங்கவரி விதிப்பால் இந்த EV நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க தாமதமானது. தற்போது வரிவிதிப்பு 110%லிருந்து 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காமெடி கேரக்டரில் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் செந்தில், தற்போது ஒரு படத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். அப்புதிய படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இயக்குநர் சாய் பிரபா மீனா இப்படம் பற்றி கூறும்போது, ஒரு நாற்காலி, அதில் அமரப்போகும் தலைவன் யார் என்ற போட்டி 4 கேங்ஸ்டர் குழுக்களிடையே நடப்பதாகவும், அதில் வென்றது யார்? என்பதுதான் படத்தின் கதை என்றும் தெரிவித்துள்ளார்.
கோவையில் 17 வயது கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 மாணவர்களை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் மாணவியிடம் பழகிய மாணவர்கள், அவரை குனியமுத்தூர் வரவழைத்து அறையில் அடைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய்யின் TVK தொடங்கியது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது இஸ்லாமியர்களின் வாக்குகளை இழுக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் மேலும் சில முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே ODIகளில் ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2022ல், 47 போட்டிகளில் விளையாடி, 7 சதங்கள், 15 அரை சதங்கள் என 2,538 ரன்களை எடுத்தார். 2023ல், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 1,584 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். அண்மையில் ENGக்கு எதிரான 3 போட்டிகளில், 1 சதம், 2 அரைசதங்கள் என 259 ரன்களை குவித்தார். அதனால் CTல் அவர் மிகுந்த மதிப்புமிக்க வீரராக கருதப்படுகிறார்.
கும்பமேளாவுக்கு செல்வது அவ்வளவு ஈஸி இல்லை. ரயில்களில் டிக்கெட் கிடைக்காது, ஹைவேக்களில் டிராஃபிக், விமானப் பயணம் காஸ்ட்லி. சோ, மாற்றி யோசித்த மும்பை தம்பதி அர்பித் – ஷிவானி பைக்கிலேயே புறப்பட்டனர். மொத்தம் 1,400 கிமீ தூரத்தை பைக்கிலேயே கடந்துள்ளனர். களைப்பு, தூக்கம் என இடர்கள் இருந்தாலும் கும்பமேளாவுக்காக ரிஸ்க் எடுக்கலாம் என்கிறார் ஷிவானி. உங்கள் கருத்து என்ன கமெண்ட் செய்யுங்கள்.
மது தொழிலில் யுவராஜ் சிங் புதிதாக இணைந்துள்ளார். அவரது பிராண்டின் பெயர் FINO Tequila. ஷாருக்கானுக்குச் சொந்தமான பிராண்ட் D’YAVOL. சஞ்சய் தத் The Glenwalk பிராண்ட்டை சொந்தமாக்கியுள்ளார். அனிருத்தும், தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இணைந்து Loca Loka பிராண்ட்டை வைத்துள்ளனர். ஹிந்தி படங்களில் நடித்துள்ள நேபாள் நடிகர் டேனி டென்சோங்பா, Yuksom Breweriesஐ வைத்துள்ளார்.
நாள்தோறும் வாழ்க்கையில் நடப்பவற்றை டைரியில் குறிப்பெடுக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த எவி ரிஸ்கி (100), 90 ஆண்டுகளாக டைரி எழுதி வருகிறார். 10 வயதில் டைரி எழுதத் தொடங்கிய அவர், இடையில் ஒரு நாள் கூட விடாமல், இதுவரை 33,000 டைரிகளை எழுதி குவித்துள்ளார். அன்றாடம் நடப்பவற்றை தூங்கச் செல்வதற்கு முன் டைரியில் எழுதுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.