news

News February 18, 2025

பள்ளிகளில் இருந்து நீக்கப்படும் கடிகாரங்கள்!

image

கடினமான விஷயங்களை பிள்ளைகள் கஷ்டப்பட்டாவது புரிந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் எண்ணிய காலம் மலையேறி விட்டது. அதற்கு உதாரணமாக, பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் இருந்து முள் கடிகாரங்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் கடிகாரங்கள் மாட்டப்படுகின்றன. தேர்வின் போது முள் கடிகாரத்தில் டைம் பார்க்க மாணவர்கள் திணறுவதால் இந்த முடிவாம். சரி., நீங்க என்ன டைம் என சொல்லுங்க பார்ப்போம்.

News February 18, 2025

21,413 காலியிடங்கள் 10-வது பாஸ் போதும்

image

இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 21,413 காலியிடங்களை (Gramin Dak Sevaks- GDS) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் இதில் 2292 பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் அடிப்படை தகுதிகளாகும். சைக்கிள் (அ) இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-40. மெரிட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3 ஆகும்.

News February 18, 2025

நிலுவைத் தொகையை உடனே விடுவியுங்கள்: CM ஸ்டாலின்

image

நிதியுதவி பெறும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் நிலுவைத் தொகையை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். TNல் மத்திய அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக கூறிய அவர், PMMVY திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ₹304 கோடியில், ₹184 கோடி விடுவிக்கப்படவில்லை என்றார். காலதாமதமாக நிதி வழங்குவதால், குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகக் கூறியுள்ளார்.

News February 18, 2025

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வு

image

சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தி வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, SBI வங்கி கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக ₹3,000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது ₹5,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. PNB வங்கி குறைந்தபட்ச கையிருப்பை ₹1,000ல் இருந்து ₹3,500ஆகவும், கனரா வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை ₹1000ல் இருந்து, ₹2,500 ஆகவும் உயர்த்தியுள்ளது.

News February 18, 2025

மோடிஜியே சொல்லிட்டாரு.. ஷாக் கொடுத்த பெண்கள்

image

டெல்லி ரயில் நிலையத்தில் நேரிட்ட கூட்ட நெரிசல் போன்று நிகழாமல் இருக்க, பிஹாரின் பக்ஸர் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு கூட்டமாக நின்றிருந்த பெண்களைப் பார்த்து டிக்கெட் எடுத்தீர்களா எனக் கேட்டுள்ளார். அதற்கு, கும்பமேளாவிற்கு, ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க PM மோடி அனுமதி அளித்துள்ளதாக அப்பெண்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு ஷாக்கான அவர், உண்மையை சொல்லி புரிய வைத்துள்ளார்.

News February 18, 2025

₹1 லட்சம் வேண்டுமா? தினமும் ₹50 போதும்!

image

போஸ்ட் ஆபீசில் RD திட்டத்தில் ₹50 என்ற அளவில் மாதம் ₹1,500 சேமித்து வாருங்கள். இந்த திட்டத்தின் முதிர்வு காலமான 5 ஆண்டுகள் முடிவில், நீங்கள் செலுத்திய தொகை ₹90,000 ஆக இருக்கும். அதனுடன் 6.7% வட்டி வருமானமாக, ₹17,050 கிடைக்கும். எனவே, மொத்தம் ₹1,07,050ஐ நீங்கள் பெறலாம். மேலும், 12 தவணைகளை செலுத்திய பின், அதில் 50% வரை கடனாக பெறலாம். அதேபோல், RD திட்டத்தை நீட்டிக்கவும் செய்யலாம்.

News February 18, 2025

ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அப்ளை செய்ய, அப்டேட் செய்ய…

image

ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, ஏற்கெனவே உள்ள கார்டில் மாற்றம் செய்ய https://tnpds.gov.in/ தளத்துக்கு செல்லவும் *புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவும் *அதில், குடும்ப உறுப்பினர்கள் விவரம், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை பதிவிடவும் *தேவையான ஆவணங்களை, குடும்பத்தினர் போட்டோக்களை பதிவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஓரிரு வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். SHARE IT.

News February 18, 2025

மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

image

அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் வரும் 24ஆம் தேதி இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பிப்.24ல் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

News February 18, 2025

‘பிங்க்’ ஆட்டோ திட்டம் மார்ச்சில் அறிமுகம்

image

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி, மோட்டர் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களே இயக்கும் இந்த ஆட்டோக்களில் GPS சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். மார்ச் மாத இறுதிக்குள் சென்னையில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இத்திட்டம், படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது.

News February 18, 2025

கோடை டென்ஷன்: குடிநீரை வீணாக்கினால் ₹5,000 ஃபைன்

image

சம்மர் சீசன் வந்தாலே, சென்னையை போலவே கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை பெங்களூருவும் சந்திக்கிறது. இதனால், இந்த ஆண்டு குடிநீரை வீணாக்கினால், ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. அதாவது, வாகனங்களை கழுவுதல், தெரு சுத்தம் செய்தல், தோட்டக்கலை மற்றும் கட்டிட வேலைகளுக்கு குடிநீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை சென்னைக்கு இந்த சட்டம் வருமோ?

error: Content is protected !!