India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. வதோதராவில் முதலில் களமிறங்கிய GGW அணி, 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய MIW அணி, 16.1 ஓவர்களில் 122/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இன்று நடைபெறும் ஆட்டத்தில், டெல்லி-உ.பி., அணிகள் மோதுகின்றன.
இன்று (பிப்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
இன்று (பிப்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
பிரிட்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்த மிலுஸ்கா என்ற பெண், தான் கர்ப்பமாக இருப்பதால் WORK FROM HOME கேட்டுள்ளார். ஆனால், அதனை ஏற்காததோடு, உடனடியாக அவரை நிறுவனத்தின் உரிமையாளர் பணிநீக்கமும் செய்துள்ளார். இதையடுத்து, தொழிலாளர் தீர்ப்பாயத்தில் அப்பெண் முறையிடவே, அவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே ஒரு மொழி பேசும் நிலையை உருவாக்கவே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். தமிழை பிராந்திய மொழி என்றும், இந்தியை இந்தியாவின் மொழி என்றும் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம் எனக் கூறிய அவர், இந்தியும் பிராந்திய மொழிதான் என்று தெரிவித்தார். மேலும், இந்தி மூலமாக பல மாநிலங்களின் தாய்மொழிகளை அவர்கள் சிதைத்து விட்டதாகவும் திருமாவளவன் சாடினார்.
உ.பி. மாநிலம் கஸ்ஜங் மாவட்டத்தில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, மணமகனின் உறவினர், உணவு ருசியாக இல்லையே எனக் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த மணமகளின் தாய்மாமா, தனது துப்பாக்கியை எடுத்து அவரது தலையில் சுட, சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார். தற்போது மாமா கம்பி எண்ணுகிறார். மாப்ள பாவம்தான்ய்யா..
பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கான தடுப்பூசி, ஐந்து முதல் ஆறு மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, 9 முதல் 16 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முக்கியமாக, இந்த தடுப்பூசி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கவல்லது.
யாருக்காவது காலில் ஆணி குத்தினாலோ, உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ மருத்துவர் TT ஊசி போட சொல்லுவார். அதற்கு முழு அர்த்தம் Tetanus Toxoid. அதாவது, அந்த சிராய்ப்புகள் மூலம் Clostridium Tetani என்ற பாக்டீரியா உடலுக்குள் சென்றிருந்தால், அதனை கொல்லக்கூடிய மருந்து தான் TT. முந்தைய காலங்களில் Tetanusஆல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உயிரிழந்தனர். ஆனால், தற்போது நவீன மருத்துவ முறைகள் நம்மை காக்கின்றன.
முன்னணி தியேட்டர் நிறுவனமான PVR, படம் பார்த்த ஒருவருக்கு அபராதம் கட்டியிருக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த அபிஷேக் என்பவர், 4.05 மணிக்கு திரைப்படம் தொடங்கும் என்று டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்ததாகவும், 4.28 மணி வரை விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதாகவும் குற்றம்சாட்டி நீதிமன்றத்தை நாடினார். 25 நிமிடங்களை வீணடிப்பது சாதாரண விஷயமல்ல என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் PVRக்கு ₹28,000 அபராதம் விதித்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள், இக்கொடுமை குறித்து சைல்டு ஹெல்ப் லைனில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (58) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.