India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாகத் தேசிய அளவிலான நிபுணர் குழு அமைக்காதது ஏன் என மத்திய அரசுக்கு SC கேள்வி எழுப்பியுள்ளது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க உத்தரவிடக் கோரிய கேரள அரசின் மனு மீதான விசாரணையின் போது, கடைசியாக எப்போது ஆய்வு நடத்தப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் TN அரசுக்கு ஆட்சேபனை உள்ளதா என்பதை அறிய விரும்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை நேரலையில் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்படுவதாக, என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முகங்கள் இருட்டடிப்பு செய்வதை போன்று, தமிழக சட்டப்பேரவையும் ஓம் பிர்லா மாடலை பின்பற்றுகிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் நேரலையில் காட்டுவதில்லை என்று அதிமுகவும் புகார் தெரிவித்திருந்தது.
பொங்கல் பண்டிகைக்கு மேலும் 8 <
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கான காரணத்தை சீமான் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் விற்பனை என ஆட்சியில் பல அவலங்கள் நடந்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்த பொய்யை பேச வேண்டுமா என நினைத்து, ஆளுநர் வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசு உரையை படித்திருந்தால், அவர் DMKவில் சேர்ந்து விடலாம் என்றுதான் தாங்கள் நினைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யார்_அந்த _சார் என்ற அதிமுகவினரின் கேள்விகளுக்கு #இவன்தான்_அந்தSIR என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் <<15096884>>ட்ரெண்டிங் <<>>செய்கின்றனர். அண்ணா பல்கலை., விவகாரமும், சிறுமி வன்கொடுமை விவகாரமும் மிகப்பெரிய குற்றம். இதில் சமரசமின்றி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு பதில் #இவன்தான்_அந்தSIR என்பதன் மூலம் அண்ணா பல்கலை., விவகாரத்தை மடைமாற்றும் செய்யும் முயற்சி நடப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
‘பிரீமியம் ரேட் சர்வீஸ் மோசடி’ பற்றி ஜியோ நிறுவனம் வார்னிங் கொடுத்துள்ளது. +91 எனத் தொடங்கும் எண்களை தவிர, மற்ற சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால், திரும்ப அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை அப்படி அழைத்தால், 1 நிமிடத்திற்கு ₹200-300 வரை உங்கள் பணம் சார்ஜ் செய்யப்படும். எனவே, உங்கள் மொபைலில் International Call Blockingஐ Enable செய்யுமாறு, ஜியோ அட்வைஸ் வழங்கியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு ‘மதகஜராஜா’ வெளியாகும் நிலையில், நீண்ட வருடங்களாக ரிலீஸாகாமல் பல படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. 2016ல் ரிலீசுக்கு தயாரான ‘துருவ நட்சத்திரம்’, 2014ல் உருவான VJSன் ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீசாகவில்லை. அதேபோல், VP இயக்கிய ‘பார்ட்டி’, 2018ல் உருவான பிரபுதேவாவின் ‘யங் மங் சங்’, அரவிந்த் சாமி நடித்த ‘நரகாசூரன்’ படங்களும் எப்போது ரிலீசாகும் என்றே தெரியவில்லை.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்று ஆளும் திமுகவுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், சென்னையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரின் போட்டோவை வெளியிட்டு, #இவன்தான்_அந்தSIR என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
இங்கி. அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு தனது வாய்ப்பை உறுதி செய்து விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் டி20யில் ஒரே ஆண்டில் 3 சதங்களை அடித்த வீரராக உள்ளார். அணியில் யார் இருக்கணும் சொல்லுங்க?
ADMKவினர் மீதான நடவடிக்கையை வாபஸ் பெற்றார் சபாநாயகர் அப்பாவு. ஆளுநர் உரையன்று பதாகைகளை ஏந்தி வந்து உரிமை மீறலில் ஈடுபட்ட அதிமுகவினரிடம், உரிய விசாரணை நடத்த அவை உரிமை மீறல் குழுவுக்கு இதனை அனுப்புவதாக சபாநாயகர் கூறினார். அப்போது CM ஸ்டாலின், ADMKவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று சபாநாயகர், முடிவை திரும்பப் பெற்றார்.
Sorry, no posts matched your criteria.