India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NTK மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் கோ.தமிழரசன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான், தமிழ் தேசியத்திற்கு எதிரான, பிழையான தத்துவங்களை நோக்கிப் பயணப்படும் பாஜகவிடம் தங்களை விற்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காளியம்மாளை ‘பிசுறு’ என்றதும், பொட்டு அம்மானை ‘மசுரு’ என்றதும் தவறு எனக் கூறியுள்ளார். இது சீமானுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
CT தொடருக்காக துபாய் சென்றுள்ள முகமது சிராஜ், அங்கிருந்து மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பெரிய மசூதியில் வழிபாடு செய்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். CT தொடருக்கான 15 பேர் அடங்கிய உத்தேச அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். யாராவது ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயமடைந்தால் மட்டுமே அவர் அணியில் விளையாடுவார்.
வடசென்னையை வளர்ச்சியடைந்த சென்னையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். புளியந்தோப்பு பகுதியில் 712 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், வடசென்னை வளர்ச்சிக்கான நிதி ₹1,000 கோடியிலிருந்து ₹6,400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். மேலும், 2021 தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாகவும் கூறினார்.
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹1,160 உயர்ந்துள்ளது. கடந்த 16ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹63,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று காலை நேர சந்தை நிலவரப்படி சவரனுக்கு ₹520 உயர்ந்துள்ளதால் ₹64,280க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் இம்மாத இறுதிக்குள் சவரன் 67 ஆயிரத்தை எட்டும் என வியாபாரிகள் கணித்துள்ளனர். உங்கள் கணிப்பு என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு SBI வங்கி 1,194 Concurrent Auditor காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு அதிகபட்சமாக, வயது வரம்பு 60 – 63 வரை இருக்கலாம். ₹80,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு இன்று முதல் அடுத்தமாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு இந்த <
இளம்பெண் ஒருவர் தன் ஆண் துணையுடன் சிரித்த முகத்துடன் இருப்பதும், பின் கடுமையாக தாக்கப்பட்ட போட்டோவும் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. ‘பெண்களே மனம், குணத்தின் அடிப்படையில் உங்கள் துணையை தேர்வு செய்யுங்கள். முகம், பணத்தை வைத்து அல்ல’ என அந்த போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பெண்கள் இதை தங்கள் ஸ்டோரியாக வைத்துள்ளனர். ஆண்களின் பணம், அழகில் மயங்கினால் இதுதான் கதி எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தொடர் குற்றங்களுக்குப் பிறகும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இனியும் தொடர தார்மீக உரிமை இல்லை. பள்ளிக் கல்வித் துறைக்கு திறமையான நபரை CM அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. இந்நிலையில், அதே போன்றதொரு குத்துப் பாடலை ‘கூலி’ படத்திலும் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறியுள்ள நிலையில், மேற்கூறிய தகவலும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.19) கிராமுக்கு ₹65 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரே நாளில் ₹520 உயர்ந்து மீண்டும் சவரன் ₹64,000-ஐ கடந்துள்ளது. ஒரு கிராம் ₹8,035க்கும், சவரன் ₹64,280க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹108க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,08,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?
புனித நதிகளில் நீராடுவது முக்கிய ஆன்மீக கடமை. அதிலும் மகா கும்பமேளா என்றால் சொல்லவே வேண்டாம். கூட்டம் அலைமோதும். அப்படி புனித நீராட வருபவர்களில் அத்தனை பேரும் நல்லவர்கள் அல்ல. சில மோசமானவர்களும் இருக்கிறார்கள். நதிகளில் குளித்து எழும் பெண்களை ஆபாசமாக படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு காசு பார்த்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் கவனமாக இருப்பது நல்லது.
Sorry, no posts matched your criteria.