India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி, தவெகவுடன் கூட்டணி அமைத்ததாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் தலைவர் முஸ்தபா மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று, TVKவின் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து கூறியதாகவும், இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி எனறும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. வெற்றி பெறும் அணிக்கு ₹19.5 கோடி பரிசாக கிடைக்கும். ரன்னர்–அப் டீமுக்கு ₹9.7 கோடி, அரையிறுதி வரை வரும் அணிகளுக்கு தலா ₹4.9 கோடி கிடைக்கும். பரிசுத் தொகை 53% வரை உயர்த்தப்பட்டு ₹60 கோடி செலவிடப்படுகிறது.
வரும் 25ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 2025 – 2026 நிதிநிலை அறிக்கை குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு தேர்தல் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
சிலியின் எல் சாஸ் ஆய்வு நிலைய TELESCOPEல் கடந்த ஆண்டு பயங்கரமான காட்சி பதிவானது. பாகுபலியில் பிரபாஸை பார்த்து மிரளும் நாசரை போல, விஞ்ஞானிகளும் அதைக் கண்டு மிரண்டனர். ஏனெனில் பூமியை நோக்கி ராட்சத விண்கல் வந்துக் கொண்டிருந்த காட்சி அது. மேலும், அதன் விட்டம் 177 அடி, 2032ல் மோதலாம் என கணிக்கப்பட்டது. அதற்கான சான்ஸ் 2.6% ஆக இருந்தது. ஆனால், இந்த வாரம் அதன் சதவீதம் 3.1% உயர்ந்துள்ளது.
கொடைக்கானல் மலை பூண்டு கடந்த வாரம் கிலோ ரூ.350 – ரூ.400 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்ட்ரா, ஊட்டியில் இருந்து அதிக அளவிலான பூண்டு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால் அதன் விலை மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கிலாே ரூ.150ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், லாபத்தை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதானி மீதான ₹2,029 கோடி ஊழல் புகாரில் விசாரணை மேற்கொள்ள, அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது. இது தொடர்பாக இந்திய சட்ட அமைச்சகத்திடம் உதவி கேட்டுள்ளதாக, அந்த ஆணையம் நியூயார்க் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காண்ட்ராக்ட் பெற்று, அதன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்கு நடந்து வருகிறது.
மும்பை அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு உறுப்பினருமான மிலிந்த் ரேஜ்(76) மாரடைப்பால் காலமானார். ரஞ்சி டிராபியில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த மிலிந்த் ரேஜ், பல போட்டிகளில் ஆல் ரவுண்டராக அசத்தியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான சுனில் கவாஸ்கரின் நெருங்கிய நண்பரான மிலிந்த் ரேஜ், மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
USAல் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாகக் கூறி, நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள், அந்நாட்டு தடுப்பு முகாம்களில் எதிர்கொண்ட துயரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சீக்கியர்கள் புனிதமாக கருதும் டர்பனை, குப்பைத் தொட்டியில் வீசியதாகவும், அங்கு தங்கியிருந்த 18 நாள்களும் நரக வேதனையை சந்தித்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். சரியான உணவு, குளிருக்கு போர்வை கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
ஹீரோக்களை சுற்றி ஓடுவது, காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எல்லாம் தனக்கு பிடிக்காமல் போய்விட்டதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். அதுபோன்ற படங்களில் நடிப்பதை 27 வயதிலேயே நிறுத்திவிட்டதாகவும், தற்போது தனக்கு 47 வயது ஆவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘36 வயதினிலே’, ‘ராட்சசி’, ‘காற்றின் மொழி’ உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே அவர் தற்போது நடித்து வருகிறார்.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, நாகாலாந்து மற்றும் திரிபுராவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ரூ.1,544.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு தமிழகம் கேட்ட ரூ.37,000 கோடி நிதி ஒதுக்கப்படவில்லை. மாறாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 27 மாநிலங்களுக்கு ஏற்கெனவே ரூ.18,322.80 கோடி ஒதுக்கப்பட்டுவிட்டதாக அமித் ஷாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.