India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 143 ▶குறள்: விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார். ▶பொருள்: தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
BGT தொடரில் விராட், பும்ராவிடம் வம்பிழுத்து கவனம் பெற்ற இளம் ஆஸி. வீரர் கான்ஸ்டஸ், கோலி தனக்கு கடவுள் மாதிரி என தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்தை பார்த்து தான் வளர்ந்ததாகவும், போட்டி முடிந்த பிறகு அவரிடம், உங்களது மிகப்பெரிய ஃபேன் என பேசியதாகவும் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். விராட் மரியாதையுடன் பேசக்கூடிய சிறந்த மனிதர் எனவும், நன்றாக விளையாட தன்னை வாழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ஆந்திர அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
▶ஜனவரி 9 ▶மார்கழி- 25 ▶கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: பரணி ▶சந்திராஷ்டமம்: அஸ்தம்
இன்று (ஜன. 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர CM சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். சோக சம்பவம் குறித்து டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசிய அவர், கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் இன்று திருப்பதி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜன. 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
2010ல் ஆர்டர் செய்த 40 தேஜஸ் போர் விமானங்கள் கூட இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என விமானப்படை தளபதி ஏபி சிங் கவலை தெரிவித்துள்ளார். சீனா தனது விமானப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நாம் அதில் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். சீனா 6ஆவது தலைமுறை போர் விமானத்தை வைத்திருக்கும் நிலையில், இந்தியாவின் 5ஆம் தலைமுறை விமானம் இன்னும் கட்டமைப்பு நிலையிலேயே உள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணப்பெண்ணின் தாய்மாமா, திருமண விருந்தில் திடீரென விஷத்தை கலந்துள்ளார். இதை பார்த்த சிலர் அவரை பிடிக்க முயல, அவர் தப்பியோடிவிட்டார். விசாரணையில், அவரது பெயர் மகேஷ் என்பதும், அவரது விருப்பமில்லாமல் திருமணம் நடைபெறுவதால் இச்செயலில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மாமாவே இப்படி செய்யலாமா?
இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விண்வெளித்துறையின் முக்கிய பொறுப்பில் நாராயணன் நியமிக்கப்பட்டது, தமிழகத்திற்கு பெருமை எனக் கூறியுள்ளார். மேலும், நாராயணன் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாடு பல உச்சங்களை தொட வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.