India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாதி என்பது பெருமை அல்ல, அது அவமானகரமானது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், மாரியின் படங்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை உருவாக்கும் வண்ணம் உள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி பேசியுள்ள அவர், போஸ்டர் ஒட்டி சாதிப் பெருமை பேசலாம், ஆனால் நான் சாதிக்கு எதிராக பேசக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
*1956 – கேரளா, ஆந்திரா, மைசூர் (கர்நாடகா) மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
*1956 -கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மெட்ராஸ் (தமிழ்நாடு) உடன் இணைந்தது.
*1959 – தியாகராஜ பாகவதர் நினைவுநாள்.
*1973 – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.
*1974 – VVS லக்ஷ்மன் பிறந்தநாள்.

‘SIR’ என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடுகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அந்த SIR-ஐ இதுவரை CM ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை என்றும் சாடினார். 2016 – RK நகர் இடைத்தேர்தலின்போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர் என்று சுட்டிக்காட்டிய நயினார், இன்று SIR-ஐ அவர்களே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.

*உங்கள் ஆழ்மனதுக்கு ஒரு கோரிக்கை விடுக்காமல், ஒருபோதும் தூங்கச் செல்லாதீர்கள்.
*தைரியமாக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.
*இங்கே எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது, அதை கண்டுபிடியுங்கள்.
*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்தலாகும்.
*ஒரு ஆணின் சிறந்த நண்பர், ஒரு நல்ல மனைவி.

ஜனவரியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்று அஜித் கூறிவிட்டார். அதேநேரம், ‘F1’ பட ரீமேக் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இதனை ரீமேக் செய்வதன் மூலம் F1 ரேஸிங்கை பிரபலப்படுத்த முயன்றால், அதுவே தனக்கு மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் ‘தல கண்டிப்பா F1 ரீமேக் பண்ணுங்க’ என்று அஜித் ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில், வங்கிகள் தங்களின் இணையதள முகவரியை .bank.in என்ற டொமைனுக்கு மாற்றியுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. SBI, PNB,கனரா ஆகிய பொதுத்துறை வங்கிகளும், HDFC, ICICI, AXIS, Kotak Mahindra உள்ளிட்ட தனியார் வங்கிகளும் புதிய டொமைனுக்கு மாறிவிட்டன. ஆனால், சில தனியார் வங்கிகள் மட்டும் இன்னும் .com என்ற முகவரியில் தொடர்கின்றன. உங்க பேங்க் எப்படி?

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 506 ▶குறள்: அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. ▶பொருள்: நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பாஜக – RSS காரணமாகவே உருவாவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார். எனவே, RSS அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI), முஸ்லிம் லீக், Jamiat Ulema-e-Hind ஆகியவற்றின் மொழிகளையே கார்கே பேசுவதாகவும் சாடியுள்ளது.
Sorry, no posts matched your criteria.