India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும், கிள்ளியூர் காங். MLAவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்கச் சென்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக அவர் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போது மூவருக்கும் சிறை தண்டனையுடன் ₹100 அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பருக்குப் பிறகே தவெக முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டில் அக்கட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைக்கு தேர்தல் களப்பணிகளில் நிர்வாகிகளை ஈடுபட வைப்பதில் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும், அதன் பின் மக்களை சந்தித்துவிட்டு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார். தனது மகன் தனுஷ், மருமகள் அக்ஷயா ஆகியோர் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் உடல்நலம் குறித்து சிலர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
SC மற்றும் தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய <<16159926>>பாஜக<<>> எம்பி நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரலாமா என வழக்கறிஞர் ஒருவர் SC-யிடம் அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டின் அனுமதி தேவைப்படாது, ஆனால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலை பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநர் மற்றும் வக்ஃப் விவகாரத்தில் SC-யின் தீர்ப்பை துபே கடுமையாக சாடியிருந்தார்.
பேக்கரி டீலிங் திமுகவுக்குதான் பொருந்தும் என்று இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். வடிவேலு காமெடியில் வருவது போல அதிமுக பேக்கரி டீலிங் செய்து 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்திருந்தார். இந்த டீலிங் திமுகவுக்கு கைவந்த கலை என்றும், அறிவாலய மேல்தளத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, கீழ்தளத்தில் திமுக கூட்டணி பேச்சு நடத்தி கொண்டிருந்ததாக இபிஎஸ் பதிலடி கொடுத்தார்.
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் போப் பிரான்சிஸ், ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் & ஆறுதல் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா மைதானத்தில் பிட்ச் குறித்து வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லேயும், சைமன் டவுலும் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. KKR அணிக்கு சாதகமாக இல்லாத கொல்கத்தா மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு அவர்கள் மாற வேண்டும் என இருவரும் தெரிவித்திருந்தனர். இதனால் இருவரும் இனி கொல்கத்தாவில் நடக்கும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை கோரி பெங்கால் கிரிக்கெட் சங்கம் BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிஸ்டத்தில் மிகப் பெரிய தவறு இருப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவுடன், இந்தியாவுக்கு நட்புறவு நீடிக்கிறது என்றும் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். போப் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த துயரமான வேளையில், உலகம் முழுவதும் உள்ள கத்தாேலிக்க கிறிஸ்தவர்களுக்கு தனது இதயம் கனிந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக அவர் கொண்டிருந்த உறுதி தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக–பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்துவிட்டது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இந்த கூட்டணியால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்ததால் அவர் பதற்றத்துடன் தங்களது கூட்டணியை விமர்சிப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தங்களது உரிமை என்றும் தெரிவித்தாா். நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணி தான் என்றும் இபிஎஸ் விளக்கம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.