India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 தாெடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில், ரூ.1,000 முன்கூட்டியே டெபாசிட் செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1.14 கோடி பேர் வங்கிக்கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்யும் பணி தொடங்கி உள்ளதாகவும், இன்று அனைவரின் வங்கிக்கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல் ரவுண்டர் பிரிவில் ஜடேஜா முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளார்கள். பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில், ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் இருக்கிறார். இப்பட்டியலில் விராட் 25வது இடத்திற்கு வெளியே இருக்கிறார்.
TNPSC குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. VAO, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்தாண்டு ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடந்தது. 6,244 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று முறையே 480, 2,208, 559 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், மேலும் 41 பணியிடங்கள் சேர்த்து 9,532ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் முடிந்த நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு தங்குத் தடையின்றி கிடைக்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடுகளில் ஒன்றாக, மாநிலம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தை அடுத்து, திமுகவுக்கு எதிராக அதிமுகவினரும், அதிமுகவினருக்கு எதிராக திமுகவினரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், #இவன்தான்_அந்தSIR என்ற பதிவுடன், ஜெயக்குமார் ஒரு பெண்ணின் தாயாருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை திமுக ஐடி விங்க் மீண்டும் வைரலாக்கி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இதே ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதால் இதை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.4,000ம், நாகர்கோவிலுக்கும் ரூ.4,000ம் டிக்கெட் கட்டணம் பெறப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது.
ஜனவரி மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ ₹1000 இன்றே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14ஆம் தேதி செலுத்தப்படும் இந்தத் தொகையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. உங்கள் வங்கிக் கணக்கில் ₹1000 வந்துள்ளதா? கமெண்ட்ல சொல்லுங்க..
பெரியார் குறித்து சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பெரியார் திராவிடர் கழகம், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை இன்று முற்றுகையிடப் பாேவதாக அறிவித்திருந்தது. அப்படி ஒருவேளை முற்றுகையிட்டால் பதற்றம் உருவாகலாம் எனக் கருதி, முன்னெச்சரிக்கையாக சீமானின் வீட்டை சுற்றி தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் விராட் கோலி, ஓய்வு பெற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி கோலி ஓய்வு பெற்றால், அது இந்திய அணிக்குதான் பெரிய பாதிப்பாக அமையும் என ஆஸி. வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். அடுத்த போட்டியில் கூட கோலி இரட்டை சதம் அடிக்கலாம், அவர் அந்தளவிற்கு திறமையானவர், அவராக ஓய்வு பெறும் வரை விளையாடவிட வேண்டும் என தெரிவித்தார்.
சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,225க்கும், 1 சவரன் தங்கம் ரூ. 57,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து, ரூ. 7,260ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.280 அதிகரித்து ரூ.58,080க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.100ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சமாகவும் விற்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.