India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளையராஜாவின் பல பாடல்கள் நம்மை கொள்ளை கொண்டாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே ‘மாஸ்டர் பீஸ்’ என கூறுவோம். அதில், மூடுபனி படத்தில் வெளியான ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடல் முதன்மையானது. எவர்கிரீனான இந்தப் பாடலை யுவன் தற்போது ரீ-க்ரீயேடே் செய்துள்ளார். பா. விஜய் இயக்கத்தில் உருவாகும் அகத்தியா படத்திற்காக இது ரீ-க்ரீயெட் ஆகியுள்ளது. இப்பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர TNSTC உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வார விடுமுறையை மாற்றியமைக்கவும், அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர், மண்டல மேலாளரிடம் முன் அனுமதிபெற்று விடுப்பு எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்காததற்கு ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் அஸ்வின் சுவாரசியமாக பதிலளித்துள்ளார். “தன்னால் இதை சாதிக்க முடியாது என யாராவது கூறினால், அதை சாதிக்க வேண்டும் என்று வேலை செய்வேன். ஆனால் இந்திய அணிக்கு கேப்டனாகும் தனக்கு தகுதி இருப்பதாக பலர் தன்னிடம் கூறியதால் அதில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டேன்” என ஜாலியாக தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானை, அந்நாட்டு அரசு மாற்ற முடிவு செய்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்ரானை புது தலைநகராக மாற்றத் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல், தண்ணீர், மின் பிரச்னைகள், அதீத மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் இம்முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும், சர்வதேச வர்த்தகப் பாதையாக மக்ரானை உருவாக்க ஈரான் விரும்புகிறது.
வாரத்திற்கு 90 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என L&T தலைவர் சுப்ரமணியன் பேசியதற்கு, தீபிகா படுகோன் ரியாக்ட் செய்துள்ளார். ஒரு பெரிய பதவியில் இருப்பவர், இது போன்று பேசுவது அதிர்ச்சி அளிப்பதாக, ‘Mental Health Matters’ என்ற ஹேஷ்டேக்குடன் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த 2015ல் டிரஸ்ட் தொடங்கி, தீபிகா சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடல் ஆரோக்கியத்தை பேண இரவு தூக்கம் முக்கியமானது. நன்றாக தூங்க சில டிப்ஸ் ➛உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யுங்கள் ➛வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள் ➛பகல் தூக்கத்தை தவிர்க்கவும் ➛படுக்கை என்பது தூங்குவதற்கான இடம், அதனால் படுக்கையில் படிப்பதோ, டிவி பார்ப்பதையும் தவிர்க்கவும் ➛படுக்கையறையை இருட்டாக, அமைதியாக வைத்து கொள்ளவும் ➛தூங்குவதற்கு முன் மது, டீ, காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் திராவிட கழகத்தினர், வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், அவர் மீது தற்போது வழக்கு பாய்ந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்பமேளா, உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. யோகிகளும், பக்தர்களும் உ.பி.யில் இப்போது முதலே குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வரவுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து அ.மகாதேவன் விலகியுள்ளார் ஏற்கெனவே, பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் நாதகவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தனக்கு முக்கியத்துவம் தரவில்லை. கட்சியை பலப்படுத்துவதற்கு பதில் சீமான் பலவீனப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி தனது ஆதாரவாளர்களுடன் அவர் விலகியுள்ளார்.
மாணவர் ஒருவருக்கு, ஐஐடி ரூர்க்கி அனுப்பிய மெயில் தான் வேற லெவலில் பேசுபொருளாகி உள்ளது. மாணவரின் பெயருக்கு பதிலாக ‘Dear IDLI CHUTNEY NO SAMBHAR’ எனக் குறிப்பிட்டு GATE தேர்வுக்கான அட்மிட் கார்டை அனுப்பியுள்ளது. இதை அந்த மாணவர் சமூக வலைதளத்தில் எடுத்து போட, தங்களுக்கும் இதே மாதிரி வந்துள்ளதாக பல மாணவர்களும் ஆதங்கத்தை கொட்டினர். டெக்னிக்கல் பிரச்னையால் இப்படி நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.