news

News August 9, 2025

மினுமினுக்கும் உடையில் ‘அனேகன்’ ஹீரோயின்

image

இன்ஸ்டாவில் படு ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மினுமினுக்கும் உடையில் காந்தக் கண்களைக் கொண்டு அவர் பார்க்கும் பார்வைக்கு, ரசிகர்கள் லைக்ஸ் மாரி பொழிந்து வருகின்றனர். ‘அனேகன்’ படத்தின் மூலம் அமைரா தமிழிழ் அறிமுகமானார். அதையடுத்து பிரபுதேவா உடன் ‘பஹீரா’ படத்தில் நடித்தார். தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார்.

News August 9, 2025

வங்கிக் கணக்கு தொடர்பாக RBI புதிய உத்தரவு

image

உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்குகளை செட்டில் செய்வது தொடர்பாக, வங்கிகளுக்கு RBI புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட், லாக்கரில் உள்ள பொருள்களை கேட்டு குடும்பத்தினர் (அ) நாமினிகள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் பரிசீலித்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும். தாமதமாகும் நாள்களுக்கு 4% ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

News August 9, 2025

5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 35-45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 9, 2025

பொதுக்குழு விவகாரம்.. ராமதாஸ் மேல்முறையீடு

image

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.

News August 9, 2025

வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்: CM ஸ்டாலின்

image

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு விழாவில் பேசிய அவர், அயோத்தியின் பெருமையை சொல்லும் போது கூட, காவிரி நாட்டுடன் கம்பர் ஒப்பிட்டதாகவும், கம்பர் கண்ட கனவு படி தமிழகம் பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் அவருக்கு ஆற்றும் தொண்டு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

ஆடி மாத சனிக்கிழமையில் யாரை வழிபடலாம்?

image

எவருக்குமே பயப்படாதவர்களும் கூட, சனீஸ்வரருக்குப் பயப்படுவார்கள். அதனால்தான் சனிபகவானை ஈஸ்வரப் பட்டம் சேர்த்து சனீஸ்வரர் என அழைக்கிறோம். ஆடி மாத சனிக்கிழமையில் சனீஸ்வரரை வணங்கி காகத்துக்கு உணவளித்தால், சனி கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. நம் முன்னோர்களின் வடிவமாகத் திகழும் காகத்துக்கு உணவிடுவதால் அவர்களும் நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

News August 9, 2025

போலி வாக்காளர்களால் திமுக வெற்றி: இபிஎஸ் சாடல்

image

போலி வாக்காளர்களால் தான் சென்னை மாநகராட்சியில் திமுக வெற்றி பெறுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்து கொடுத்ததாகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.

News August 9, 2025

கோபம் தான் சிராஜின் ஆயுதம்: ரஹானே

image

சிராஜின் கோபமும், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையும் அவரை இன்னும் சிறப்பாக பவுலிங் செய்ய வைக்கும் என ரஹானே தெரிவித்துள்ளார். தன்னுடைய கேப்டன்சியில் 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் டெஸ்ட்டில் சிராஜ் அறிமுகமானதாகவும், அவரை லேட்டாக பவுலிங் வீச வைத்ததற்கு கோபபட்டதாகவும் ரஹானே நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அதே கோபம் இங்கிலாந்து தொடரிலும் எதிரொலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

டிரம்ப் – புடின் சந்திப்பு தேதி உறுதியானது

image

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது மற்றும் நேட்டோ படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ரஷ்யாவின் கோரிக்கையாக உள்ளது.

News August 9, 2025

ஆகஸ்ட் 9: வரலாற்றில் இன்று

image

*உலக பழங்குடிகள் நாள். *1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானஸ் என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார். *1892 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார். *1991 – விடுதலைப் புலிகளின் ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த போரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

error: Content is protected !!