India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியின் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால் ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வாடிகன் நாட்டில் வசிக்கும் போப்தான் உலகம் முழுவதிலும் உள்ள RC கிறிஸ்தவர்களின் தலைவராக இருக்கிறார். அவர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்து விட்டாலோ, அடுத்த போப்பை தேர்வு செய்யும் முறை விசித்திரமானது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 120 கர்தினல்கள் (மூத்த பாதிரியார்கள்) வாடிகன் நகருக்கு வருகை தருவார்கள். அவர்கள் அனைவரும் வாக்கு செலுத்தி புதிய போப் தேர்வு செய்யப்படுவார்.
வாடிகன் நாட்டில் உள்ள சிஸ்டின் சேப்பலில் மூடிய அறையில் தேர்தல் நடைபெறும். 80 வயதுக்கு குறைவான கர்தினல்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். பொதுவாக, கிறிஸ்தவர்கள் அனைவருமே போப் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள்தான் என்றாலும், கர்தினல்களில் ஒருவர்தான் போட்டியிடுவார். வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெறும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார்.
மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் யாருக்கும் கிடைக்காவிட்டால், வாக்குச்சீட்டுகள் எரிக்கப்பட்டு கரும்புகை வெளியிடப்படும். போப் தேர்வு செய்யப்பட்டால், வெண் புகை வெளியிடப்படும். அதை வைத்து மக்கள் போப் தேர்வானதை அறிந்து கொள்வார்கள். பின்னர், புதிய போப் தனது புதிய பெயரை தேர்வு செய்துகொண்டு பால்கனி மூலம் மக்களுக்கு காட்சியளிப்பார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் X தளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது போஸ்டில், போப்பின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைதியை விரும்புவோருக்கு இது பேரிழப்பு என்றும் அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.
வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. நிஃப்டி 273 புள்ளிகள் உயர்ந்து 24,125 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 855 புள்ளிகள் உயர்ந்து 79,408 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வங்கிகளுக்கு 4-வது காலாண்டின் லாபம் அதிகமாக இருப்பதால் அதன் மதிப்பு உயர்கிறது. இதன் தாக்கத்தால், பங்குச்சந்தையும் ஏற்றமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கணவரை கொன்றுவிட்டு, தனது தோழியிடம் வீடியோ காலில் பேசியதாக <<16162893>>கர்நாடகா<<>> முன்னாள் DGP ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அரக்கனை கொன்றுவிட்டதாக தோழியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். நிலங்களை கணவர் தன் குடும்பத்தாருக்கு எழுதி வைத்ததால் இருவருக்கும் பிரச்னை தொடங்கியது. நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், மிளகாய் பொடி தூவி பல்லவி குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
CSK-வுக்கு முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாதான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ரெய்னா இன்னும் 3 ஆண்டுகள் CSK-வுக்காக விளையாடி இருக்க வேண்டும் எனவும் சென்னை நிர்வாகம் அவருக்கு உறுதுணையாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். நடப்பு சீசனில் மோசமாக விளையாடி வரும் சென்னை அணி பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
திரையுலகில் எப்போதுமே படத்தின் கேப்டனான இயக்குநர்களை விட நடிகர்கள்தான் அதிகமாக சம்பளம் வாங்குவார்கள். ஆனால் ஷாருக்கான் போன்ற சூப்பர் ஸ்டார்களை விட இயக்குநர் ராஜமௌலி அதிக சம்பளம் பெறுகிறாராம். IMDB தகவலின்படி சம்பளம், லாபத்தில் பங்கு உள்ளிட்டவை சேர்த்து ₹200 கோடிக்கு மேல் ராஜமௌலிக்கு ஒரு படத்தில் கிடைக்கிறதாம்.
Sorry, no posts matched your criteria.