India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். வயிறு நிறைய சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தா மாணவர்களுக்கு படிப்பு நல்லா வரும் எனக் கூறிய அவர், மாணவர்களுக்கான உணவில் தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை சேர்க்க வேண்டுமெனவும் இதன் மூலம் ரத்த சோகையை தடுக்க முடியும் எனவும் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது பணம் டெபாசிட்டாகும் என காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ல் பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாள்களில் இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பயனர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
போலி விளம்பரங்களால் குளறுபடிகளை மறைத்துவிட திட்டமா என நயினார் சாடியுள்ளார். தாராபுரம், பூனாயிருப்பு அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை CM-க்கு சுட்டிக்காட்டிய அவர், ஏழைக்குழந்தைகள் தானே படிக்கிறார்கள் என்ற அலட்சியத்தோடு உணவு தயாரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை விரிவுப்படுத்துவது பலனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகனில் இயக்குநர்கள் லோகேஷ், விக்னேஷ் சிவன் ஆகியோர் பத்திரிகையாளர்களாக கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தது. அந்த வரிசையில் தற்போது படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வேட்டையனில் ரஜினியுடன் இணைந்தும், ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் உடன் இணைந்தும் அவர் நடனமாடியது நினைவுகூரத்தக்கது.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் உடல்நலனில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். டீ, காபியில் இருக்கும் Tannic acid நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை உங்கள் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும். இதனால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி-ஐ தவிர்த்துவிடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
<<17503903>>தங்க நகைகளுக்கு 90% கடன்<<>> வழங்குவதாக சவுத் இந்தியன் வங்கி அறிவித்தது. இதற்காக, SIB GOLD EXPRESS என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகள் அவகாசத்துடன் ₹25,000 முதல் ₹25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவணையாக இல்லாமல் இதனை எந்த நேரத்திலும் திருப்பி செலுத்தலாம். சிறு தொழில்முனைவோர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது. SHARE IT.
காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17521026>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆர்யபட்டா (1975)
2. ஆல்பர்ட் சபின்
3. பிரிட்டன்
4. பிங்க்- பாங்க் அல்லது டேபிள் டென்னிஸ் பால்
5. முதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர்
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க!
அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் MLA கலிலூர் ரஹ்மான் (78), வயது முதிர்வால் காலமானார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், 2006-ம் ஆண்டு திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இஸ்லாமியர்களின் அடையாளமாக இருந்த அவர், 2 முறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் (15921) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரூட் (13543) உள்ளார். இந்நிலையில் ரூட் திறமை குறித்து ரெடிட் தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2012-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அவர் விளையாடிய விதமும், விக்கெட்டை மதிப்பிடும் முறையும் தன்னை கவர்ந்ததாகவும், இங்கி., கேப்டனாக இவர் வருவார் என சகவீரர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.