news

News April 26, 2025

கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

image

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 26, 2025

பூத் கமிட்டி என்றால் என்ன?

image

அரசியல் கட்சியின் தலைவர், மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் என்ற வரிசையில் கடைசியாக இருக்கும் குழுதான் பூத் கமிட்டி. தேர்தல் நேரங்களில் இவர்கள் வீடு வீடாக சென்று தங்களது கட்சிக்கு வாக்குகள் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவார்கள். 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் 68,321 பூத்கள் அமைக்கப்பட்டன. ஒரு பூத்துக்கு 10 பேர் கமிட்டி என்று வைத்துக் கொண்டால் கூட 6.8 லட்சம் பேர் ஒரு கட்சிக்கு பூத் வேலை செய்யத் தேவை.

News April 26, 2025

ரீ ரிலீஸ் லிஸ்ட்டில் விஜயின் ப்ளாக்பஸ்டர் படம்

image

அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவின் காக்க காக்க படங்களை ரீ ரிலிஸ் செய்யவுள்ளதாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட விஜய்யின் சச்சின் அப்போது வெளியானதை விட, தற்போது 10 மடங்கு லாபம் எனக் கூறிய தாணு, 2026-ல் தெறி, ரஜினியின் கபாலி ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். வேறு எந்தப் படத்தை ரீ ரிலிஸ் செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

News April 26, 2025

சிந்து நதி நீரை தடுப்பது நியாயமா? சீமான் கேள்வி

image

பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும், அவற்றை விடுத்து 30 கோடி பாக். மக்களின் குடிநீர், பாசன வசதிகளுக்காக உள்ள சிந்து நதி நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், பாஜக அரசின் இந்த செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News April 26, 2025

முட்டை, மீன்கள் விலை அதிகரிப்பு

image

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில்லை. தற்போது நாட்டுப் படகில் மட்டுமே மீன்பிடித்து வரப்படுகிறது. இதனால் மீன்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஷீலா மீன் ஒரு கிலோ 1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊழி, பாறை மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ₹4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News April 26, 2025

பொன்முடியை மறைமுகமாக அட்டாக் செய்த கனிமொழி

image

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களை மோசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பெண்களை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க மாட்டார் என்று பொன்முடியை கனிமொழி மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மதவாதிகள் சிலர் தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர் எனக் கூறிய அவர், தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது; அதை தவிர்க்க வேண்டும் என்றார்.

News April 26, 2025

ராகு, கேது பெயர்ச்சி: வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்

image

இன்று மாலை ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம், துலாம் ராசிக்காரர்கள், வீட்டின் தென்மேற்கு மூலையில், நல்லெண்ணை விளக்கு ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, நாளை காலை 7:30 – 8:30 அல்லது மாலை 4:30 – 6:00 விளக்கு ஏற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.

News April 26, 2025

IPL: PBKS முதலில் பேட்டிங்

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் KKR, PBKS அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் முனைப்போடு களம் இறங்குகிறது.

News April 26, 2025

9,970 காலியிடங்கள்… அப்ளை செய்துவிட்டீர்களா?

image

ரயில்வேயில் துணை ஓட்டுநராக (Assistant Loco Pilot) பணியாற்ற விரும்புகிறீர்களா? இந்த பணிக்கு 9,970 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர SSLC தேர்ச்சி பெற்று, ITI முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் Diploma, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம்: ரூ.19,900. வயது வரம்பு 30. மே.11க்குள் <>RRB<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 26, 2025

பாகிஸ்தானியர்கள் விசா காலக்கெடு

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. SAARC விசா உள்ளவர்கள் இன்று (ஏப்.26) நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வணிக, பத்திரிகையாளர், மாணவர் உள்ளிட்ட விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் வருகிற 29-க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது.

error: Content is protected !!