India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2021-ல் போலீசுக்கு வார விடுமுறை வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வார விடுமுறை தொடர்பான அரசாணையை போலீஸ் உயரதிகாரிகள் பின்பற்றாதது ஏன்? காவலர்களுக்கு சங்கங்கள் இல்லாதது ஏன்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் டிஜிபி விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு ரிஷப் பண்ட் தலைமையிலான LSG அணியும், அக்சர் படேலின் DC அணியும் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன. இரு அணிகளும் 5 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்துடன் இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும். புள்ளிப் பட்டியலில் DC 2-ம் இடத்திலும் LSG 5-ம் இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் 6 முறை நேருக்குநேர் மோதி தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் யார் ஜெயிப்பாங்க?
பாஜகவுடனான கூட்டணியில் சேர ராமதாஸ் விரும்பவில்லை என்றும், தவெக உடன் இணைய திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 6 மாதங்கள் காத்திருந்து விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முடிவு செய்யலாம் என அவர் திட்டமிட்டுள்ளாராம். அப்படி செல்லவில்லை என்றாலும், தவெகவை காட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கலாம் என்பது ராமதாஸின் பிளான் என கூறப்படுகிறது.
▶ உலக புவி நாள். ▶ 1870 – புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்த நாள். ▶ 1962 – எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள். ▶ 1992 – மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டனர். ▶ 2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. ▶ 2014 – காங்கோவில் ரயில் விபத்து ஏற்பட்டு 60 பேர் உயிரிழந்தனர்.
கார்கே நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்ததால் காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காங். கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் கார்கே பங்கேற்ற கூட்டத்தில் காலி சேர்களே அதிகம் இருந்துள்ளன. இதனால், கூட்டம் நடைபெற்ற புக்சார் மாவட்டத்தின் காங். தலைவர் மனோஜ் குமார், கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
PM மோடி சிறந்த தலைவர் என USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜே.டி.வான்ஸை வரவேற்ற PM மோடி, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு, மோடியை சந்தித்தது கவுரவம் என்றும், அவர் சிறந்த தலைவர் எனவும் ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
▶ அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான். ▶ அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும். ▶ கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும். ▶ இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த போப் ஆண்டவருக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாள்களில் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது.
முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா MP ஆக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜகவின் இந்த கோரிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டால், தெலுங்கு தேசம் MLA-க்களின் ஆதரவுடன் அண்ணாமலை ராஜ்ய சபா MP ஆவார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 314 ▶குறள்: இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். ▶பொருள்: நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
Sorry, no posts matched your criteria.