India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970 முதல் ‘உலக புவி தினம்’ அனுசரிகரிக்கப்படுகிறது. நமக்கு வாழ்க்கை அளித்து வரும் பூமியை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது. இந்த ஆண்டின் தீம் ‘Our Planet, Our Power’, அதாவது, 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 3 மடங்காக உயர்த்துவதை குறிக்கிறது.
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு DA உயர்த்தி அறிவித்த பின்னர் மாநில அரசுகளும் உயர்த்துவது வழக்கம். 2% DA உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் <<16165541>>மே மாதம்<<>> அரியருடன் வழங்கப்படவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து ஒடிசா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் DA-வை உயர்த்தியுள்ளன. ஆனால், TN அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 2026 தேர்தலை மனதில் வைத்து 3% அல்லது அதற்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயர் கொண்ட போப் ஆண்டவரின் இளமை கால காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமலியா டாமோன்டே என்பவருக்கு அவர் எழுதிய காதல் கடிதத்தில், ‘நான் உன்னை திருமணம் செய்யவில்லை என்றால் பாதிரியாராகி விடுவேன்’ என போப் குறிப்பிட்டிருந்துள்ளார். அந்த காதல் கைகூடாததால், 22 வயதில் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு சேவையாற்றத் தொடங்கிய அவர், போப் ஆண்டவராக மறைந்திருக்கிறார்.
மக்களே, வாட்சப்ல ஒரு சூப்பர் அப்டேட் வரப்போகுது. அதாவது, வாட்சப் மெசேஜை அங்கயே மொழி பெயர்க்கிற ஆப்சன் வரப்போகுதாம். இதுமூலமா, வேறவேற மொழி பேசுறவங்க கூட ஈசியா சாட் பண்ணிக்கலாம். மொழிபெயர்க்க வேறு ஆப் தேவை இல்லாததுனால உங்க வாட்சப் டேட்டா பாதுகாப்பா இருக்கும். ஆன்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் வாட்சப் யூஸ் பண்ணுறவங்களுக்கு இந்த அப்டேட் வந்துருச்சின்னு சொல்லப்படுது. இனி மொழி பிரச்னை இல்லப்பா!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருட்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது: ✦வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிஷ்டத்தை உண்டாக்கும் ✦கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருட்கள் (வாசப்படி மேட், சிலைகள்) இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ✦உடைந்த சேதமடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
ஐபிஎல் தொடரில் அதகளம் செய்து வருகிறார் குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன். 8 போட்டிகளில் விளையாடிய அவர், 5 அரைசதம் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சாய் சுதர்சன் விளையாடுவதை பார்க்க அருமையாக இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இந்திய அணிக்காக விளையாடுவதை காண ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நாளை (ஏப்.23) தீர்ப்பளிக்க உள்ளது. டாஸ்மாக்கில் ₹1,000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்தது. ஆனால், சோதனை சட்டவிரோதமானது என டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நாளை தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
போஸ்ட் ஆபீஸில் கிளை போஸ்ட் மாஸ்டர் & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 21,413 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். முதற்கட்ட பட்டியல் மார்ச் 22-ல் வெளியானது. தற்போது 2-ம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. https://indiapostgdsonline.gov.in/ இணையதளத்தில் அறியலாம்.
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை கடும் போட்டி நிலவுகிறதாம். இதில், முன்னிலையில் இருப்பது ரோமியோ பிக்சர்ஸ் எனத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தமிழக உரிமையை ₹90 கோடிக்கு வாங்க அந்நிறுவனம் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விலையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ₹1,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.