news

News April 22, 2025

சித்த மருத்துவர் செய்யுற வேலையா இது?

image

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையை ₹1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சித்த மருத்துவர் சத்யபிரியா கைதாகியுள்ளார். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது, பிரசவம் பார்ப்பது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், திருமணத்தை மீறிய உறவில் பிறக்கும் குழந்தைகளை இது போல விற்பனை செய்து வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

News April 22, 2025

பண மோசடி வழக்கில் மகேஷ் பாபுவிற்கு ED நோட்டீஸ்!

image

மகேஷ் பாபுவுக்கு ED நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரை வரும் 27-ம் தேதி ஆஜராகவும் தெரிவித்துள்ளது. ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று ஏமாற்றியதாக, சூரானா குழுமம், சாய் சூர்யா டெவலப்பர்கள் மீது புகார்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிக்க மகேஷ் பாபு பெற்ற ₹2.5 கோடி, மோசடி பணத்தில் இருந்து வழங்கப்பட்டதாக ED சந்தேகித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News April 22, 2025

அன்வர் ராஜா விலகல் என பரவும் போலி கார்டு!

image

அதிமுகவிலிருந்து Ex MP அன்வர் ராஜா விலகியதாக சமூக வலைத்தளங்களில் போலி நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் அது முற்றிலும் தவறான தகவல் என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அன்வர் ராஜா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

News April 22, 2025

6 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

image

தலைப்பை படித்தவுடன் ஷாக்காக வேண்டாம். ஹரியானாவில், 2 சகோதரர்கள் குழந்தைகளின் திருமண செலவை குறைக்க நினைத்து, இந்த யோசனையை கண்டுபிடித்துள்ளனர். தங்களது 6 பிள்ளைகளுக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 மகன்களுக்கு திருமணம் கடந்த 18-ம் தேதியும், 4 மகள்களுக்கு 19-ம் தேதியும் திருமணம் செய்யப்பட்டது. ஊருக்கு இதுவும் ஒரு நல்ல மெசெஜ் தானே!

News April 22, 2025

கிரிக்கெட் விளையாடியதற்கு வருந்துகிறேன்: Ex- கேப்டன்

image

முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனின் பெயர் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அசாருதீன், சில நேரங்களில் கிரிக்கெட் விளையாடியதற்கு வருந்துகிறேன். கிரிக்கெட்டை பற்றி புரிதல் இல்லாதவர்கள், வழிநடத்தும் இடத்தில் இருப்பதைப் பார்ப்பது மனம் உடைகிறது. இது கிரிக்கெட்டுக்கு அவமானம் என அசாருதீன் தெரிவித்துள்ளார். அவரின் பெயரை நீக்கியது சரியா?

News April 22, 2025

சவுதி செல்லும் பிரதமர் மோடி

image

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவுதி புறப்பட்டுச் செல்கிறார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின்பேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், எரிசக்தி, ராணுவம், வணிகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 22, 2025

பாப் உலக ஜாம்பவான் ஹஜ்ஜி அலெஜாண்ட்ரோ காலமானார்!

image

பிரபல நடிகரும், பாடகருமான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹஜ்ஜி அலெஜாண்ட்ரோ காலமானார். பாப் உலகின் ஜாம்பவானாக இருந்த இவர், சில காலமாகவே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 70, 80களில் தனது கலைப்பயணத்தை தொடங்கி, ‘Kay Ganda ng Ating Musika’, ‘Nakapagtataka’ போன்ற உலகளவில் ஹிட்டடித்த ஆல்பங்களில் பாடியுள்ளார். Kumusta ka, Hudas, Stepanio போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். #RIP

News April 22, 2025

சொந்த வீடு கட்ட முடியுமா? கலக்கத்தில் மிடில் கிளாஸ்

image

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை ஒரே அடியாக யூனிட்டுக்கு ₹1,000 வரை உயர்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதியளித்திருப்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். யூனிட் ₹4,000க்கு விற்று வந்த ஜல்லி, இனி ₹5,000க்கு விற்கப்படும். எம்.சாண்ட் விலையும் ₹6,000 ஆக உயர்கிறது. இதனால் சொந்த வீடு கட்ட நினைப்போரின் கனவு, கனவாகவே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

News April 22, 2025

போப் பிரான்சிஸ் மறைவு: தமிழகத்தில் 2 நாள்கள் துக்கம்

image

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி தமிழகத்தில் 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதே போல் நாடு முழுவதும் 3 நாட்கள் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2025

‘Thanks bro..’: முன்னாள் கோச்சுக்கு நன்றி சொன்ன ரோஹித்!

image

CSK அணிக்கு எதிரான தனது சரவெடி ஆட்டத்தை MI Opener ரோஹித் ஷர்மா, முன்னாள் இந்திய பேட்டிங் கோச் அபிஷேக் நாயருக்கு டெடிகேட் செய்துள்ளார். தனது இன்ஸ்டாவில் , ‘thanks bro’ என பதிவிட்டு, அதில் அபிஷேக்கை டேக் செய்துள்ளார். BGT தொடரில் இந்திய அணியின் பர்ஃபாமன்ஸ் சரி இல்லை என்ற காரணத்தால், அபிஷேக் நாயர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!