India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையுடன் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை அவர் என போப் பிரான்ஸூக்கு புகழாரம் சூட்டப்பட்டது. மனித நேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் என சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
2000-களில் ‘சார்.. ரம்பா சார்’ என சொல்லாத இளைஞர்களே இருக்க முடியாது. ஆனால், 15 ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இது குறித்து பேசிய ரம்பா, ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என நினைத்ததால், சினிமாவில் இருந்து தள்ளி இருந்ததாகவும், எப்போதும் தன் முதல் காதல் சினிமாதான் என்றும் தெரிவித்தார். மீண்டும் அவர் நடிப்பார் என்றே தெரிகிறது. உங்களுக்கு பிடிச்ச ரம்பா படம் எது?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,290-க்கும் ஒரு சவரன் ₹74,320-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
ஓசூரில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய விமான நிலையத்திற்கான ஆய்வு நடத்தப்பட்டு அதன் இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி பரிந்துரைக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்து, இறுதி ஓட்டெடுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.
திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் போர்டு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளது. அதாவது, டிக்கெட் வாங்கிய பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளது. முன்னதாகவே வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இமயமலையில் ஏற்படும் நிலநடுக்கத்தால் இந்தியா பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் பில்ஹாம் கணித்துள்ளார். வட இந்தியாவில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவில் 8.2-8.9 வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், இதனால் சுமார் 30 கோடி பேர் பாதிப்பை சந்திக்க நேரிடலாம் என்றும் கணித்துள்ளார். அண்மைக் காலமாக வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
தொடர் பயன்பாட்டால், போன் அதிகளவில் சூடாகும். இது சம்மர் சீசனில் இன்னும் அதிகமாகவே நிகழும். இந்த பிரச்னையை தீர்க்க ➢நேரடி வெயிலில் இருந்து போனை விலக்கி வைக்கவும் ➢சார்ஜ் செய்யும் போது அதிகமாக போனை யூஸ் பண்ண வேண்டாம் ➢எப்போதும் தேவையில்லாத பின்னணி ஆப்-களை மூடி வைக்கவும் ➢லொகேஷன் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவும் ➢அதிக ஸ்பேஸை உரிஞ்சும் கேமிங் ஆப்-களை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். SHARE IT.
பள்ளி மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கான மானியம் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாமாகவே வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் இனி அவர்கள் சேமிப்பு, டெபாசிட் கணக்குகளை தொடங்கி, இயக்கவும் முடியும்.
கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.