news

News April 22, 2025

விஷ்ணு விஷால் வீட்டிற்கு வந்த மகாலட்சுமி

image

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, முதல் மனைவியுடன் விவாகரத்து ஆன பிறகு 2021-ம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் 2-வது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 4-வது திருமண நாளில் குழந்தை பிறந்துள்ளதாக விஷ்ணு விஷால் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் மகன் ஆர்யன் தனது தங்கையை ஆசையுடன் பார்க்கும் காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

News April 22, 2025

இந்தியாவில் அதிகரிக்கும் SLEEP DIVORCE!

image

சமீப காலமாக இந்தியர்களிடையே ‘SLEEP DIVORCE’ அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு பின்பும் கணவன், மனைவி தனித் தனியே தூங்கும் இந்த பழக்கத்தை 70% பேர் விரும்புவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறட்டை, மாறுபட்ட பணிநேரம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மேலும், ஒரு சிலர் எந்த தொந்தரவுமின்றி நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இதனைத் தேர்வு செய்கின்றனராம். நீங்கள் எப்படி?

News April 22, 2025

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

image

சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் அறிகுறிகள் உள்ள 32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரும் நலமுடன் உள்ளனர். தொற்று பரவும் பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News April 22, 2025

22 இடங்களில் சேதமடைந்த சாலை: பரிதவிக்கும் மக்கள்

image

ஜம்மு–காஷ்மீரை புரட்டி போட்ட நிலச்சரிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் பல கி.மீ தூரத்திற்கு சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெடுஞ்சாலையில் 22 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமை சீரடைய மேலும் 5 நாள்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. மீட்புப் பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள CM உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

News April 22, 2025

வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்: TNEB புதுத் திட்டம்

image

பேட்டரி மின்சார வாகன சார்ஜிங் மையங்களை உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படுத்த TNEB திட்டமிட்டு வருகிறது. இதில் தனியாரையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அண்மையில் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி, பிற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளை TNEB அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சென்னையில் 100, மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் தலா 5-10 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News April 22, 2025

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாகுமா?

image

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் MLA மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதற்காக குழு அமைக்கப்பட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறினார். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வரும் கவனித்து வருவதாக தெரிவித்தார்.

News April 22, 2025

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதா RR? எழும் குற்றச்சாட்டு

image

ஏப்ரல் 19 அன்று LSG – RR அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதாக, ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தற்காலிக குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் பிஹானி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உடனடி விசாரணை வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். LSG-க்கு எதிரான போட்டியில், RR-க்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ரன்களில் அந்த அணி தோற்றது.

News April 22, 2025

எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு

image

சட்டப்பேரவை வளாகத்தில் இபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர். நயினார் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். இபிஎஸ்-ன் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News April 22, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

image

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் <<16177046>>இன்று (ஏப்.22)<<>> ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. பின்னர் முதல் வாரத்தில் சற்று இறக்கத்தைக் கண்டு அதன் பின்னர் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், இந்த மாதத்தில் மட்டும் (22 நாள்களில்) சவரனுக்கு ₹6,240 உயர்வைக் கண்டுள்ளது.

News April 22, 2025

சித்ரா பெளர்ணமி: கிரிவலப் பாதையில் சிறப்பு ஏற்பாடு

image

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலை சுற்றி 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. கிரிவலப் பாதையில் போதிய கழிவறைகள், குடிநீர் வசதிகளை செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பெளர்ணமியான மே 11 இரவு 8.47க்கு தொடங்கி மே 12, இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

error: Content is protected !!