news

News November 1, 2025

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு தேர்தல் குழு அமைக்கும் NDA

image

தென்மாவட்டங்களுக்கு என தனியாக சிறப்பு தேர்தல் குழுவை அமைக்க அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. பசும்பொன்னில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து, நேற்று நயினார் வீட்டில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தென்மாவட்டத்தில் வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கவும், அதிக இடங்களை கைப்பற்றும் வகையிலும் NDA, சிறப்பு தேர்தல் குழுவை அமைக்கிறது.

News November 1, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. புதிய அறிவிப்பு வந்தது

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வழங்கப்படவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. SHARE IT.

News November 1, 2025

முட்டை போடும் அதிசய மலை!

image

சீனாவில் உள்ள ஒரு மலை, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடுகிறது தெரியுமா? குயிஷோ என்ற பகுதியில் அமைந்துள்ள Chan Da Ya என்ற மலை, Limestone, சிலிகா & சாண்ட் ஸ்டோன் போன்ற அடுக்குகளால் ஆனது. இவை காலநிலை மாற்றத்தால், இப்படி முட்டையாக விழுவதாக விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால், இந்த 20–60 செமீ அளவிலான முட்டை பாறைகளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதி, உள்ளூர் மக்கள் வீட்டில் வைத்து பூஜிக்கின்றனர்.

News November 1, 2025

கடலில் மூழ்கி பலியான 4 பேர் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம்

image

எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு, CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த தேவகி, பவானி, ஷாலினி, காயத்ரி ஆகிய 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

News November 1, 2025

செங்கோட்டையனுக்கு எதிராக ஆதாரம் வெளியிட்ட EPS

image

கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாலேயே செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், MGR, ஜெயலலிதாவின் போட்டோ இல்லை என நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், கருணாநிதி போட்டோவுடன் இருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் எனக் கூறி ஆதாரத்தை காட்டினார்.

News November 1, 2025

தனக்கு தானே அழிவை தேடிக்கொள்ளும் EPS: டிடிவி

image

EPS தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறார்; அவர் வீழ்ந்து விடுவார் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல; எடப்பாடி திமுக (EDMK) என விமர்சித்த அவர், செங்கோட்டையன் தீவிரமான அதிமுக தொண்டன், திறமையான நிர்வாகி. அவரை நீக்கும் அளவுக்கு EPS-க்கு தகுதியில்லை என்றும் கொந்தளித்தார். 2026-ல் EDMK வீழ்த்தப்படுவது உறுதி; இதை யாராலும் தடுக்கமுடியாது எனவும் எச்சரித்தார்.

News November 1, 2025

‘No Shave November’ வரலாறு தெரியுமா?

image

நவம்பரில் ‘No Shave November’ ட்ரெண்டை பின்பற்றும் பலருக்கும் அதன் நோக்கம் தெரியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவே இது 2009-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. ஒரு மாதம் தாடி, மீசை சவரம் செய்யாமல், அந்த செலவை சேமித்து, நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்கொடையாக வழங்குவதே இதன் நோக்கம். நீங்களும் இந்த ‘No Shave November’ ட்ரெண்டை ஃபாலோ செய்கிறீர்களா?

News November 1, 2025

பாலியல் வழக்கு: பிரிட்டன் இளவரசர் பட்டம் பறிப்பு

image

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்பு & வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் அளித்த புகாரை அடுத்து பிரிட்டன் அரசரின் சகோதரரும், இளவரசருமான ஆண்ட்ரூவின் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூவின் பட்டங்கள், மரியாதைகள், சலுகைகள் அனைத்தையும் மன்னர் 3-ம் சார்ல்ஸ் நீக்கியுள்ளார். மேலும், அரச குடும்பத்துக்கு சொந்தமான வீட்டையும் காலி செய்ய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

News November 1, 2025

ஹாஸ்பிடலில் இருந்து ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆனார்

image

சிட்னி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். சில நாள்கள் சிட்னியில் தங்கி சிகிச்சை எடுக்கவுள்ள ஷ்ரேயஸ், விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ODI-யில் கேட்ச் பிடிக்க முயன்ற போது, அவரது மண்ணீரலில் பலத்த காயம் ஏற்பட்டு, ICU-வில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

துரோகத்திற்கு EPS-க்கு நோபல் பரிசு தரலாம்: KAS

image

துரோகம் செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்காக கிடைத்த பரிசு தான், கட்சியில் இருந்து நீக்கம் என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், துரோகம் செய்வதில் இபிஎஸ்-க்கு நோபல் பரிசு தரலாம் என்றும் கடுமையாக சாடினார்.

error: Content is protected !!