India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

OPS, TTV அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல; நீக்கப்பட்டவர்கள் என EPS விளக்கமளித்துள்ளார். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக OPS, TTV உடன் இணைந்து செங்கோட்டையன் சதி செய்தால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சிற்றரசர் போல் நடந்து கொண்ட அவரை நீக்கியதால், கோபியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என தெரிவித்தார்.

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். குறிப்பாக, ₹18.9 கோடி செலவில் 87 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக CM ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

தென்மாவட்டங்களுக்கு என தனியாக சிறப்பு தேர்தல் குழுவை அமைக்க அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. பசும்பொன்னில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து, நேற்று நயினார் வீட்டில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தென்மாவட்டத்தில் வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கவும், அதிக இடங்களை கைப்பற்றும் வகையிலும் NDA, சிறப்பு தேர்தல் குழுவை அமைக்கிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வழங்கப்படவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. SHARE IT.

சீனாவில் உள்ள ஒரு மலை, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடுகிறது தெரியுமா? குயிஷோ என்ற பகுதியில் அமைந்துள்ள Chan Da Ya என்ற மலை, Limestone, சிலிகா & சாண்ட் ஸ்டோன் போன்ற அடுக்குகளால் ஆனது. இவை காலநிலை மாற்றத்தால், இப்படி முட்டையாக விழுவதாக விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால், இந்த 20–60 செமீ அளவிலான முட்டை பாறைகளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதி, உள்ளூர் மக்கள் வீட்டில் வைத்து பூஜிக்கின்றனர்.

எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு, CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த தேவகி, பவானி, ஷாலினி, காயத்ரி ஆகிய 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாலேயே செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், MGR, ஜெயலலிதாவின் போட்டோ இல்லை என நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், கருணாநிதி போட்டோவுடன் இருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் எனக் கூறி ஆதாரத்தை காட்டினார்.

EPS தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறார்; அவர் வீழ்ந்து விடுவார் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல; எடப்பாடி திமுக (EDMK) என விமர்சித்த அவர், செங்கோட்டையன் தீவிரமான அதிமுக தொண்டன், திறமையான நிர்வாகி. அவரை நீக்கும் அளவுக்கு EPS-க்கு தகுதியில்லை என்றும் கொந்தளித்தார். 2026-ல் EDMK வீழ்த்தப்படுவது உறுதி; இதை யாராலும் தடுக்கமுடியாது எனவும் எச்சரித்தார்.

நவம்பரில் ‘No Shave November’ ட்ரெண்டை பின்பற்றும் பலருக்கும் அதன் நோக்கம் தெரியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவே இது 2009-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. ஒரு மாதம் தாடி, மீசை சவரம் செய்யாமல், அந்த செலவை சேமித்து, நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்கொடையாக வழங்குவதே இதன் நோக்கம். நீங்களும் இந்த ‘No Shave November’ ட்ரெண்டை ஃபாலோ செய்கிறீர்களா?

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்பு & வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் அளித்த புகாரை அடுத்து பிரிட்டன் அரசரின் சகோதரரும், இளவரசருமான ஆண்ட்ரூவின் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூவின் பட்டங்கள், மரியாதைகள், சலுகைகள் அனைத்தையும் மன்னர் 3-ம் சார்ல்ஸ் நீக்கியுள்ளார். மேலும், அரச குடும்பத்துக்கு சொந்தமான வீட்டையும் காலி செய்ய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.