India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு பலரும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த 2024–2025 நிதியாண்டில் டாஸ்மாக் ₹48,344 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் வருமானம் ₹2,488 கோடி அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ள அதே வேளையில் மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ராயபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4:30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக வலுவான தொகுதிகள், பலவீனமான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம்.
ஜாதி சான்றிதழில் சாதி பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘இசை வேளாளர்’ என்ற சாதியின் பெயரை ‘இசை வெள்ளாளர்’ எனக் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மாநில அரசு பிழையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இளநீர், எலுமிச்சை என பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் தாகம் தணிக்க நம்புவது எலுமிச்சை ஜூஸ்தான். இந்தச் சூழலில், ஒரு கிலோ எலுமிச்சை விலை ₹150 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ ₹120க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லி ஜன்புரா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ, சாலை மேம்பாட்டிற்காக ‘மதராஸி’ குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வாழ்வாதாரம், பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாவேந்தர் பிறந்த நாளையொட்டி ஏப். 29 – மே 5 வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தமிழ் மொழியையும், பாவேந்தரையும் கொண்டாடும் வகையில் இவ்விழா நடத்தப்படுவதாக தெரிவித்தார். மாவட்டங்களில் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடத்தி, சிறந்த படைப்புகளுக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என்றும் கூறினார்.
உலக அளவில் பிரபலமான சமையல் கலைஞர் ஜாகீர் உசேன்(58) காலமானார். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த இவர் பாரம்பரிய உணவு, செய்முறையை உலகம் முழுவதும் பலரது இல்லங்களுக்கு கொண்டு சென்று பிரபலமடைந்தவர். இதற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் அமெரிக்காவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். #RIP
கடந்த இரு சீசன்களாக LSG கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலுக்கும், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் இம்முறை LSG-யால் ராகுல் தக்க வைக்கப்படவில்லை. தற்போது DC-யில் சிறப்பாக விளையாடி வரும் ராகுல் இன்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை காட்ட நிச்சயம் உறுதியுடன் இருப்பார். பகைக்கு பழி தீர்ப்பாரா ராகுல் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.