India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 8 தனியார் பல்கலைக்கழங்கள் தொடர்பான தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு பொது சட்ட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
‘புலே’ பட விவகாரத்தில், பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதுதொடர்பாக மன்னிப்பு கோரிய அனுராக் தற்போது மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் கண்ணியத்தை மறந்துவிட்டதாகவும், முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டதற்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <
இளம் வீரரான அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் காட்டிய கண்டிப்பு குறித்து யுவராஜின் தந்தை சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். பயிற்சிக்காக அபிஷேக் யுவராஜ் வீட்டிற்கு வந்த போது, அவர் இரவு பார்ட்டி, பெண் தோழியுடன் சுற்றுவது போன்றவற்றை யுவராஜ் தடுத்ததாக கூறியுள்ளார். இதேபோல் ஷுப்மன் கில்லுக்கு யுவராஜ் அறிவுரை வழங்கியுள்ளாராம். அபிஷேக் சர்மா கிரிக்கெட் உலகில் நட்சத்திரமாக ஜொலிக்க யுவராஜ் ஒரு முக்கிய காரணம்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு தலா ₹2,000 உயர்வு வழங்கப்படும் என்றும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆண்டொன்றுக்கு ₹64.08 கோடி கூடுதல் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் இந்தாண்டு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நாசர், MLA இனிகோ ராஜ் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போப் மறைவுக்கு தமிழக அரசு ஏற்கெனவே 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாடிகனில் நடக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் இரு பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் – 1 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட மெயின் தேர்வின் முடிவுகள் <
மக்கள் பிரச்னைகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் தலைமையகத்தில் நடந்த சோதனை குறித்து பேச முயன்றபோது, அனுமதி தர முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 ரூபாய் பெற்று, மாதம் ₹450 கோடி ரூபாய் வரை அரசு ஊழல் செய்து வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
மும்பை அருகே ஓடும் அரசு பஸ்ஸில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பான்வேல் – கல்யாண் சென்ற அந்த பஸ்ஸில் கூட்டம் இல்லாததால் பின் இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் இதை கவனித்ததுடன், வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதனால், பஸ் டிரைவர், கண்டக்டர் ஏன் இதை தட்டிக் கேட்கவில்லை என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.