India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான பரீட்சைகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான பரீட்சைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?

EPS-க்கு எதிராக செங்கோட்டையன் கலகக்குரல் எழுப்பியதில் இருந்து அவருக்கு ஆதரவாக EX MP சத்யபாமா செயல்படுகிறார். அதுமட்டுமல்லாமல், பசும்பொன்னுக்கு சென்றபோது OPS- செங்கோட்டையனுடன் சத்யபாமாவும் உடனிருந்தார். அதேபோல், இன்று செங்கோட்டையன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார். இதனால், செங்கோட்டையனை தொடர்ந்து, சத்யபாமாவும் கட்சியில் இருந்து நீக்கப்படவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

OPS, TTV அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல; நீக்கப்பட்டவர்கள் என EPS விளக்கமளித்துள்ளார். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக OPS, TTV உடன் இணைந்து செங்கோட்டையன் சதி செய்தால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சிற்றரசர் போல் நடந்து கொண்ட அவரை நீக்கியதால், கோபியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என தெரிவித்தார்.

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். குறிப்பாக, ₹18.9 கோடி செலவில் 87 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக CM ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

தென்மாவட்டங்களுக்கு என தனியாக சிறப்பு தேர்தல் குழுவை அமைக்க அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. பசும்பொன்னில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து, நேற்று நயினார் வீட்டில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தென்மாவட்டத்தில் வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கவும், அதிக இடங்களை கைப்பற்றும் வகையிலும் NDA, சிறப்பு தேர்தல் குழுவை அமைக்கிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வழங்கப்படவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.