India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று முதல் 24-ம் தேதி வரை ரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 3 நாள் ரேஷன் கடைகள் இயங்காது என கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால், No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் விதித்த SC-க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள் எனக் கூறியுள்ளார். டெல்லியில் பல்கலை நிகழ்வில் பேசிய அவர், நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட அதிக அதிகாரம் கொண்டது எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தால் பயிற்சி பெற்ற மாணவர் <<16180324>>யுபிஎஸ்சி <<>>தேர்வில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியான நிலையில், உ.பி.யைச் சேர்ந்த சக்தி துபே, அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி துறையில் பட்டம் பெற்றவர் சக்தி. கடந்த 2018 முதல் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். பொலிட்டிகல் சயின்ஸ் மற்றும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் ஆகிய பாடங்களை ஆப்ஷனலாக தேர்ந்தெடுத்து படித்தார்.
ஒவ்வொரு மானியக் கோரிக்கையின்போதும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மரியாதை செய்வது வழக்கம். இன்று மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில், கருணாநிதி சமாதியில் Decoration-லாம் கரெக்ட்டா பண்ணியாச்சா “தியாகி” அமைச்சரே? என்று கேள்வியுடன் குவாட்டருக்கு ₹10 EXTRA என அதிமுக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் மறைவிற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, கொலம்பியாவின் அகுவாஸ் கிளாரஸில் உள்ள கன்னி மேரியின் சிலையில் கண்ணீர் துளிகள் வழிந்தன. புனித வெள்ளி கொண்டாட்டத்தின் போது இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் திருச்சபையினர் இந்நிகழ்வு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. கிறிஸ்தவ ஆன்மிகவாதிகள் இந்நிகழ்வை தெய்வீக தலையீட்டின் அடையாளமாக கருதிவருகின்றனர்.
‘வீர தீர சூரன்’ படத்தை ஜிஎஸ்டியுடன் சேர்த்து ₹25 கோடிக்கு தான் அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாம். முதலில் ஜியோ ஹாட்ஸ்டார் தான் அணுகியதாகவும், ஆனால் குறைந்த விலைக்கு கேட்டதால், அமேசான் பிரைமுக்கு OTT உரிமத்தை படக்குழு விற்றதாகவும் கூறப்படுகிறது. முன்னணி நடிகர் படம் என்றாலே குறைந்தபட்சம் ₹40 கோடிக்கும் மேல் தான் OTT உரிமம் விலைபோகும். ஆனால், விக்ரமின் படம் குறைந்த விலைக்கே விற்பனையாகியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
‘PM மோடி ஏசி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதில், நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால், சுமார் 1.50 கோடி குடும்பங்களுக்கு இலவச ‘5 ஸ்டார் ஏசி’யை மே மாதம் முதல் மத்திய அரசு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்ற தகவலை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.